India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் வழியாக எர்ணாகுளம்-பெங்களூரூ கண்டோன்மெண்ட்-எர்ணாகுளம் சிறப்பு ரயில்களை (06147/06148) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து இன்றும் (செப்.28), அக்.05 தேதியும், பெங்களூரு கண்டோன்மெண்ட்டில் இருந்து செப்.29, அக்.06 தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வுக்காக 33,424 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 78 தேர்வு மையங்களில் இன்று (செப்.28) நடந்த தேர்வை சுமார் 26,352 பேர் எழுதினர். 7,072 பேர் தேர்வை எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.28) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் தவெக பிரச்சாரத்தில் 40 நபர்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (செப்.29) சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தி வளர்ச்சி நிறுவனம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பட்டறைகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நலச்சங்க மாநிலத் தலைவர் ஜெகன் அறிவித்துள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (28.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

கரூர் மாவட்டத்தில் நேற்று தவெக பரப்புரை கூட்டத்தில் 39 பேர் மரணமடைந்தது குறித்து, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று கரூரில் 39 பேர் இறந்த செய்தியை கேட்டு மிகவும் மன வேதனை அடைந்ததாகவும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, செல்வகணபதி எம்பி தெரிவித்துள்ளார்.

சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பைபாஸில் இன்று காலை 15 வயதிற்கு உட்பட்ட சிறுவன் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சிக்கும்போது எதிரே வந்த லாரி மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனார். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனா தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் கரூர் விரைந்துள்ளனர்.

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.
1.முதலில்<
2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.