India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் பிப்ரவரி 4 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 11 மணி தமிழ்நாடு உடல் உழைப்பு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️ மாலை 5 மணி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️மாலை ஆறு மணி கோட்டை காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் ▶️இரவு ஏழு மணி கோட்டை ஓம் சக்தி விநாயகர் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) 750 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஊக்கத்தொகை: ரூ. 15,000 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <
சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வை 37,095 மாணவ, மாணவிகள் எழுதினர். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 300 பறக்கும் படை அலுவலர்கள், 3,100 அறை கண்காணிப்பாளர்கள், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு பணியாளர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
பழனிவேல் என்பவர் பனமரத்துப்பட்டி காந்தி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 13) 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று கோழி இறைச்சி சுத்தம் செய்யும் எந்திரத்தை மவுலீஸ்வரன் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், பெரிய வனவாசியை சேர்ந்த மணிவேல் என்பவர் அமரகுந்தியில் உள்ள தனது தங்கையை காண இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லிக்குந்தம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மணிவேல் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று (மார்ச். 3) நடைபெற்ற நிலக்கரி, கனிமவளம் மற்றும் எஃகு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டத்தில் திமுகவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள், உருக்காலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தேர்வில் 151 மையங்களில் பயிலும் மாணவர்கள் 37,161 மற்றும் தனித் தேர்வுகள் 213 என மொத்தம் 37,374 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இதில் இன்றைய தமிழ் தேர்வில் 36,903 பள்ளி மாணாக்கர்களும், 180 தனித்தேர்வர்கள் என 37,083 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இது சதவீதத்தில் 99.22 ஆகும்.
சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12672) ஆகிய ரயில்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வரும் மார்ச்.7ல் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான் பதவி உயர்வு வழங்க முடியும் என பதிவாளர் கடிதம் எழுதியிருந்த நிலையில், ஆஜராக உத்தரவு. பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர் பணி உயர்வுக்கோரி 2013ல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அரசு பணிக்கான தேர்வுக்கு தயாராகும் பொழுது எடப்பாடி சேர்ந்த குமார் போலீஸ்காரருக்கு இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் என்னுடன் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்த அவர் தற்போது என்னை ஏமாற்றி விட்டு சென்றதாக கூறி ஓமலூர் காவல் நிலையத்தில் சொர்ணா புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட ஓமலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.