India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு <

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் டி ஜி டி நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனி தேர்வாளர்களாக கலந்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் அக்டோபர் எட்டாம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.inதகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்

சேலம்: அழகாபுரத்தில் வசிக்கும் வின்சென்ட் டீ பால் என்பவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது உறவினர் இன்ஜினியர் எடிசன் ரொனால்ட் ஜவகர் என்பவர் வீடு கட்டி தருவதற்காக ரூ.1.24 கோடி பெற்றதாகவும் பல ஆண்டுகளாகியும் வீடும் கட்டாமல் பணத்தை அதிகமாக கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து இன்ஜினியர் ஜவகரை கைது செய்தனர்.

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செப்.30) காலை 11.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண் 115 மகிழம் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வுக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயுதப்பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடு வணிக நிறுவனங்களில் உருவாகும் கூடுதல் கழிவுகளை சாலையோரங்களில், காலி மனைகளில், நீர் நிலைகளிலோ கொட்டாமல் தங்களது பகுதிகளுக்கு தினசரி வீடு வீடாக வரும் திடக்கழிவுகளை சேகரிக்க வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தின் கீழ் 202526 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி பங்கேற்க விரும்புவர்கள் இணையதளம் https://tamilvalarchithurai.orgவாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் 1330 குறட்களை தடுமாறாமல் ஒப்பவிக்கும் சேலத்தை சேர்ந்த அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ரூபாய் 15,000 பரிசு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து விதமான இறைச்சி கடைகளில் அக்.2ஆம் தேதி மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான காந்தியடிகளின் பிறந்தநாளை ஒட்டி அகிம்சை அனுசரித்து அனைத்து இறைச்சிக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், தினசரி விழிப்புணர்வுப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று (செப். 29) “ஆன்லைன் மோசடியில் உங்கள் பணத்தை இழந்தால், தாமதமின்றி 1930 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாநகரில் இன்று (29.09.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.