India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகர காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பக்க கண்ணாடிகள் பழுதடைந்திருந்தால், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கண்ணாடிகள், சாலை விபத்துகளைத் தவிர்த்து, உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது

சேலம் வழியாக இயக்கப்படும் திப்ரூகர்- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22504) வரும் அக்.28- ஆம் தேதி வரை நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். கன்னியாகுமரி செல்லாது. நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே பகுதி அளவில் ரத்துச் செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இந்த ரயில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாநகரில் இன்று (30.09.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 30) வரை, மொத்தம் 46 நாட்களில் 276 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக, சேலம் மாவட்டத்தில் மட்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக இதுவரை 1,20,535 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியின் 9ஆவது வார்டிற்குட்பட்ட வாய்க்கால்
பட்டறையில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் நுண்ணுரியி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று (செப்.30) காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆயுதப்பூஜையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அக்.01 வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, புதுச்சேரி, ஓசூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்ததாவது: ’ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்களில் அதிகரிக்கும் குப்பைகளை சாலையோரம், காலி மனைகள், நீர்நிலைகளில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வணிகர்களிடமிருந்து இரவு நேரங்களில் கழிவுகளை சேகரிக்க தனி வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சாலையோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் கூறினார்.

சேலம் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மக்களே.., இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு <
Sorry, no posts matched your criteria.