India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வழியே இயக்கப்படும் ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சாம்பல்பூர்-ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311), நாளை 12-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை – ராமேஸ்வரம் விரைவு ரயில், இன்று முதல் எல்.எச்.பி. தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.”இந்த ரயிலில் அதிக இருக்கைகள் இருப்பதால், கூடுதல் பயணிகள் பயணிக்கலாம். அதிவேகத்தில் ரயிலை இயக்கினாலும் அதிர்வுகள் இருக்காது. நவீன கழிவறை, டிஸ்க் பிரேக் வசதி, தீத்தடுப்புக் கருவிகள், சிறந்த முறையிலான குளிர்சாதன வசதி உள்ளிட்ட அதிநவீன சாதனங்கள் இந்தப் பெட்டிகளில் பொருத்தப்பட்டது.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் தங்கள் வருமானத்தை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறாமல் அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெற வேண்டும். மாநில அளவில் சேலம் மாவட்டம் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ.9,101.99 கோடி வசூலித்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், இரவு நேரங்களில் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இரவு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 10 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு அமர்ந்து தர்ணாவில் இன்று ஈடுபட்டார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அருகில் வசிக்கும் நபர் ஒருவர் மது குடித்து வந்து தினமும் தொல்லை செய்கிறார். தனியாக வாழும் எனக்கு பாதுகாப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்
சேலம் வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (மார்ச் 11) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 08.25 மணி நேரம் தாமதமாக நாளை மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 100 பாரன்ஹீட் வெப்பம் வெயில் சுட்டெரித்து வருகிறது கடந்த சில நாட்களாக விஸ்கி பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது டாஸ்மார்க் விற்பனையாளர் கூறுகையில் 200 டாஸ்மார்க் கடைகள் நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது தற்போது வெயிலின் தாக்கத்தால் உயிர் விற்பனை 40 சதவீதம் கூடியுள்ளது என தெரிவித்தார்
சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்கால பயண நேர அட்டவணையை சேலம் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 30 முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.