India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் தொந்தரவு அல்லது நாய்க்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து உதவுங்கள்.
“சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது”- மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவிப்பு.
தண்டவாள புதுப்பித்தல் பணிகள் காரணமாக, ஆக.22, 26-ல் கண்ணூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை இயக்கப்படாது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். போத்தனூர்- மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 57 துணை கலெக்டர்களைப் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். சேலம் மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இளநிலை நிர்வாக அலுவலராக இருந்த மாறன், வேலூர் தனித்துணை கலெக்டராகவும் (சமூக பாதுகாப்பு திட்டம்), சிவகங்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த ஆனந்தி, சேலம் வாணிப கழக சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான 11,671 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகை உரங்களையும், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்றுச் செல்லலாம். உரங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 94433-83304, 98427-92313 ஆகிய எண்களை அழைக்கலாம்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் மாவட்டம் பேளூரில் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து மாலையை விநாயகர் கழுத்தில் போட்டால் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை. மக்களே SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.