Salem

News November 2, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 2, 2025

சேலம்: வசமாக சிக்கிய வாலிபர் போக்சோவில் கைது!

image

சேலம் மாவட்டம் ஏற்காடை சேர்ந்த விக்னேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.

News November 2, 2025

சேலம்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

சேலம் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

News November 2, 2025

சேலம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 2, 2025

ஆத்துார் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி பலி!

image

ஆத்துார் தென்னங்குடிபாளையம் ஊராட்சி அய்யனார்பாளையத்தை சேர்ந்த, மஞ்சுளா, நேற்று, வீட்டின் முன் நிலத்தில் பதித்து வைத்துள்ள, 10 அடி ஆழ தொட்டியில், குடத்தில் தண்ணீர் எடுக்க முயன்றார். அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்த அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத் தினர், தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து வெளியேவிட்டு பார்த்தபோது, மஞ்சுளா இறந்திருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 2, 2025

சேலம் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

சேலம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நவ.1 முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News November 2, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் சேலத்தில் நவ.4ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை சிறப்பு தீர்த்திருத்த முகாம் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு

News November 2, 2025

சேலம் அருகே நொடிப்பொழுதில் அரங்கேறிய துயரம்!

image

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 55). இவர் நேற்று முன்தினம் காலை அடிவாரம் பகுதியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது,அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (19) என்பவர் ஓட்டி வந்த டூவிலர் தங்கம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கண்ணங்குறிச்சி போலீசார் விசாரணை!

News November 2, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!