Salem

News April 27, 2025

சேலம் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️சேலம் கலெக்டர்- 0427-2450301. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0427-2417575. ▶️உதவி ஆணையர்- 9445000222. ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0427-2450303. ▶️தனித்துணை ஆட்சியர்- 9443797855. ▶️மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்- 0427-2411311. ▶️மாவட்ட ஊராட்சி அலுவலகம்- 0427-2450187. ▶️மாநகராட்சி ஆணையாளர்- 0427-2213131. ▶️மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர்- 0427-2350536. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.

News April 27, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

image

சேலம்மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 27, 2025

சேலத்தில் விபத்து: மாணவன் உயிரிழப்பு

image

சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரின் மகன் நகுல் (17). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், நண்பரின் புல்லட் வாங்கிக் கொண்டு ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து குரங்குச்சாவடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத வகையில் மேம்பாலத்தின் மீது மோதியத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நகுல் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 27, 2025

எர்ணாகுளம்- ஹாட்டியா ரயிலில் கூடுதலாக 2 ஏசி பெட்டி இணைப்பு!

image

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்- ஹாட்டியா
எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22837/22838) வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் கூடுதலாக எக்னாமி ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் இந்த ரயில் 19 மூன்றடுக்கு எக்னாமி ஏசி பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 26, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஏப்ரல்.26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

News April 26, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (26.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News April 26, 2025

சேலத்தில் இன்று 102.4 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!

image

சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதமடித்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்பூசணி, நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.26) 102.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது

News April 26, 2025

கோவில் வெடி விபத்து – இபிஸ் கண்டனம்!

image

கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் கோயில் விழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலேயே இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது. அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு எனது கண்டனங்கள் என அவர் தெரிவித்துள்ளார்

News April 26, 2025

ஓமலூரில் கலெக்டர் ஆறுதல்

image

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

News April 26, 2025

குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தம் – கலெக்டர் பெருமிதம்

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் குழந்தை திருமணம் குறித்து 28 புகார்கள் வந்ததாகவும், விசாரணையில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை தவறான புகார் என்றும் தெரிவித்தார்

error: Content is protected !!