India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
சேலம் மக்களே.. விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார். இதனை உங்கள் பகுதி விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க
தமிழகத்தில் இருந்து தினமும், 1,000 லாரிகள் வரை வாடகைக்கு இயக்கப் படுகின்றன. அங்கு சரக்கு களை இறக்கி விட்டு, காலி யாக நிற்கும் லாரிகளை, அங்குள்ள சிலர், கடந்த ஆண்டு சதுர்த்தியின்போது சிலைகளை கரைக்க பயன் படுத்தினர். எனவே வரும் ஆக.30 ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், லோடை இறக்கி விட்டு காலி லாரிகளை, அங்கு நிறுத்த வேண்டாம்,” எனமாநில லாரி உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT
சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத்திலும் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (ஆக.22) காலை 10.00 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மணி கேட்டுக்கொண்டுள்ளார். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவுங்க!
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.