India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
சேலத்தில் நடைபெற்ற பெண்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகரும் நடிகருமான க்ரிஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அடித்தால் எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். பெண்களையும் சமூக வலைத்தளத்தையும் பிரிக்க வாய்ப்பே இல்லை. ரீல்ஸில் இருந்து வெளியே வந்தால் நல்ல உணவு கிடைக்கும் என்றார்.
சேலம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,912 வழக்குகளில் தீர்வுக் காண்ப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 48.36 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் பெண் ஒருவரை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.08 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் இன்று (08.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.
சேலத்தில் மாம்பழம் மட்டுமல்ல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. அதுதான் மொறுமொறு தட்டுவடை செட். அப்படி என்ன ஸ்பெஷல்? பொரிகடலை, பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்ட தட்டுவடை மீது புதினா சட்னி தடவி கேரட், பீட்ரூட், வெங்காய துருவல் சேர்த்து பரிமாறும்போது ஆஹா! அப்படி இருக்கும். முன்பெல்லாம் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பழைய பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது தற்போது சேலம் மாநகராட்சி முழுவதிலும் தெருவோர கடைகளில் கிடைக்கிது.
ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக, மார்ச் 08, 11, 13, 15 ஆகிய தேதிகளில் திருச்சி- ஈரோடு ரயில் (56809) கரூர் வரையும், செங்கோட்டை- ஈரோடு (16846) கரூர் வரையும், ஈரோடு- செங்கோட்டை ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.