India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளுக்கடை , பூலாம்பட்டி கொங்கணாபுரம் , மூலப்பாதை, செட்டிமாங்குறிச்சி, சித்தூர் மற்றும் எடப்பாடி புறவழிச் சாலை ஆகிய பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

எடப்பாடி அருகே உள்ள அரியாம்பாளையம் பகுதியில் +1 படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது . தேர்வு நடைபெறும் நிலையில், படிப்பில் மகள் கவன குறைவாக இருப்பதாக கூறி தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சேலம் மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி காடையாம்பட்டி, இளம்பிள்ளையில் 23ஆம் தேதி, கருமந்துறையில் 24ஆம் தேதி, மகுடஞ்சாவடியில் 25ஆம் தேதி, நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30ஆம் தேதி குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதி ஆதரித்து இன்று சேலம் உழவர் சந்தை மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தமிழக முதல்வர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வ கணபதி ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி முதல்வருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளை நடைபெறவுள்ள சேலம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கமல்ஹாசன் இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். இன்று ஈரோட்டிலும் நாளை சேலத்திலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மலையரசன், சேலம் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதி ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை மாலை 6 மணி அளவில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அண்ணா திடலில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.