India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு சென்று வாக்களித்தார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031,2450032, 2450034, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 9489939699 என்ற எண்ணுக்கு whatsapp மூலம் தெரிவிக்கலாம்.

இல்ல திருமணத்திற்கு வண்ணமயமான அழைப்பிதழ் அச்சிட்டு உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைப்பது தமிழர் மரபு. நாளை (ஏப்.19) நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, ‘ஜனநாயக திருவிழா அழைப்பிதழ்’ என்ற பெயரில், திருமண அழைப்பிதழ் போல அச்சிடப்பட்ட அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அழைப்பிதழுக்கு, நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து ‘கமெண்ட்’ செய்து பகிர்ந்து வருகின்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக., அதிமுக., பாமக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்னும் இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால் வாக்குப்பதிவிற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, ஜலகண்டாபுரத்தில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஆண் குழந்தைக்கு ‘தீரன் ஆதித்யா’ என்று பெயர் சூட்டினார். இதில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரம்மாண்ட ரோடு ஷோ இன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு சேலம் அஸ்தம்பட்டியில் இருந்து டவுன் பகுதி வரை ரோடு ஷோ நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் நேற்றைய (ஏப்ரல்.16) வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தது, அதன் படி, சேலத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.