India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம், இன்று நள்ளிரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்ததோடு, அவரை இழந்து வாடும் குடும்பபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கலெக்டர் இரா.பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் தற்போது 108 நீர்நிலைகள் வண்டல் மண், களிமண் எடுக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இணையதள வழியில் பெறப்படும் விண்ணப்பங்களை, இணையதளதரவுகள் மூலம் சரிபார்க்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாரு தெரிவித்துள்ளார்.

சேலம்-சென்னை இடையே விமான சேவையை அதிகரிக்க வேண்டுமென, பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்ற இண்டிகோ நிறுவனம், ஆகஸ்ட் மாதம் முதல் சேலம்-சென்னை இடையே வாரம் 3 நாட்களுக்கு 2 முறை விமான சேவை இயக்கப்படுமென அறிவித்துள்ளது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களில் 2 முறை விமான சேவை இயக்கப்படும் எனவும் இண்டிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை சேலம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை, சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை எஸ்.டி.சி/ஏ. அலுவலகம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஆகிய 2 இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை மற்றும் கோவை அணிகள் மோதவுள்ளன.

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
அறை எண் 110இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என முதல்வர் தெரிவித்தது தவறு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாரயம் விவகாரத்தில், அரசின் அழுத்தம் காரணமாகவே ஆட்சியர் தவறான செய்தியை வெளியிட்டார். சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். இதற்கு தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்திக்க டெல்லி போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய போராடாமல் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக பேசுவதாகவும், இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக என்றார்.

சேலம், எடப்பாடியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்தினால், அதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்றார்.
Sorry, no posts matched your criteria.