India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சேலம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

ஐப்பசி பவுர்ணமி தினத்தையொட்டி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல நவம்பர் 4, 5ல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு நிலையங்களில் இருந்து பஸ்கள் புறப்படும். முன்பதிவு www.tnstc.in இணையதளம் அல்லது செயலி வழியாக செய்யலாம் என கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.

சேலம் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

தர்மபுரி திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்து அதன் பின்பு கார் மூலம் தர்மபுரி செல்கிறார். அவரின் வருகைக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆட்சியர், அமைச்சர் எம்பி ஆகியோர் முதலமைச்சரை வரவேற்க உள்ளனர்.

ஏற்காடு அடிவாரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் அருண் என்பவரை, நேற்று (நவம்பர் 3) சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களைக் கொண்டு கொலை முறற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் அருண் லேசான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம்: அஞ்சல்துறை சார்பில் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆவணங்களை ‘ஸ்பீடு போஸ்ட்’டில் அனுப்பும் போது சேவை கட்டணத்தில் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. நேரடியாக தபால் அலுவலகங்களுக்கு சென்று சில்லரை முறையில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி நேற்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடையில் இருந்த தாயும் மகளும் பலத்த காயமடைந்தனர். மேலும் கடையிலிருந்து அனைத்து பழங்களும் நசுங்கி வீணானது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹூப்ளி மற்றும் இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் (எண் 07355) சேலத்தில்
சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு வரும், 7.55 மணிக்கு புறப்படும். ரயில் எண் 07356 ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு வரும்,5.50 மணிக்கு புறப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். **
Sorry, no posts matched your criteria.