Salem

News July 28, 2024

காவேரி ஆற்றில் செல்ஃபி எடுக்கத் தடை

image

சேலம் மாவட்டத்தில் காவிரியில் இருந்து 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம், காவிரியில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News July 27, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

image

சேலம் மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,18,296 கன அடியில் இருந்து 1,23,184 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 101.700 அடியில் இருந்து 103 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நீர் இருப்பு 68,958 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

News July 27, 2024

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவியை நிரப்புக

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை நிரப்ப வேண்டும்; நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஐஏஎஸ் அதிகாரியை பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விரைந்து விசாரித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News July 27, 2024

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்த நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News July 27, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் www.tnvelaivaaippu.gov.in இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை பெற்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையங்களுக்கு சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News July 27, 2024

நாளை முதல் தண்ணீர் திறப்பு

image

ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டாவில் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறபட்டவுள்ளது.

News July 27, 2024

100 அடியை எட்டியது மேட்டூர் அணை

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் வரலாற்றில் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து 450 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் 60 அடி அதிகரித்து, தற்போது 100 அடியை எட்டியுள்ளது.

News July 27, 2024

சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.300க்கு விற்ற குண்டு மல்லி நேற்று ரூ.500 – ரூ.550 வரை விற்கப்பட்டது. ரூ.150க்கு விற்ற முல்லை ரூ.200க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் விற்கப்பட்டது. காக்காட்டான், மலைக்காட்டான் ரூ.160க்கும், செவ்வரளி, நந்தியாவட்டம், சாதா சம்பங்கி ஆகியவை ரூ100க்கும் விற்பனை. வெள்ளை அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை ரூ.60க்கும் விற்பனை.

News July 27, 2024

தமிழ் புதல்வன் திட்டம் ஆலோசனை கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் “தமிழ்ப் புதல்வன் திட்டம்“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தலைமையில் இன்று (26.07.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட சமூக நல அலுவலர் இரா.சுகந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.

News July 26, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் இன்று நடைபெற்றது. ‘விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 10 முதல் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதிலளிக்க வேண்டும்’ என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!