India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி சேலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சேலத்திற்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர் ரா.பிருந்தாதேவி, தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் சே.கணேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ப.இரவிக்குமார்,உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.கதிரவன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

இன்று கோவை மத்திய சிறையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துச் சென்றபோது, நடு வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நேற்று தெரிவிக்கையில், வட்டார வள பயிற்றுநர்கள் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்: 207, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் என்ற முகவரிக்கு 6.08.2024 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்திற்கும் மேல் கனஅடி நீர் வெளியேறிவருகிறது. விரைவில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும், எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சேலம் ஆட்சியருக்கு மேட்டூர் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்பும் பணியினை மேச்சேரி அருகே உள்ள திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து வைத்தனர். இதுதொடர்பாக இபிஎஸ் நேற்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு (ம) அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் <

மேட்டூர் அணையில் இருந்து காவேரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஈரோடு (ம) சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் நடைபெற்று இருந்த விசைப்படகு போக்குவரத்து இன்று இரண்டாவது நாளாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் திறப்பட்டுள்ளதையொட்டி, மேட்டூர் வட்டம், தங்கமாபுரிப்பட்டணம், பெரியார் நகர் பகுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று இரவு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். உடன் மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, உள்ளார்.

சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.இராஜேந்திரன், உடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.