India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி துணை மின் நிலையம் , மல்லியக்கரை துணை மின் நிலையம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (27-08-2024) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் காலை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உடையாப்பட்டி துணை மின் நிலையம் , மல்லியக்கரை துணை மின் நிலையம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (27-08-2024) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் காலை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என அந்தந்த மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கடந்தாண்டு ஆன்லைனில் முறைகேடாக ரயில் டிக்கெட் எடுத்து அதனை விற்பனை செய்த 335 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 1.25 கோடி மதிப்பிலான ரயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் தகவல்.

சேலம், ஆத்தூரில் உள்ள ஆத்தூர் கிளைச் சிறையில் மளிகைப் பொருட்களை வெளியில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆத்தூர் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் நேற்று உத்தரவிட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஜெயந்தியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சேலம், ஈரோடு எடிஸ்ஸியா அரங்கில் ஏற்றுமதிக்கு ஏற்ற சந்தைகள் மற்றும் பொருட்கள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (சிணைளீ-மதுரை) துணை தலைவரும், ஏற்றுமதியாளருமான ராஜமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 75388- 49222, 85249- 22323 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டம் ஒமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக 100 டன் வர வேண்டிய சந்தைக்கு, 20 டன் அளவு மட்டுமே பூண்டு வந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

மைசூரு- செங்கோட்டைக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி செப் 4, 7ஆம் தேதி இரவு 9.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும். சேலத்துக்கு 5.40 மணிக்கும், கரூருக்கு காலை 7.10-க்கு வந்து விடும். செங்கோட்டையில் இருந்து செப்.5, 8 ஆம் தேதிகளில் 7.45-க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30-க்கு செல்லும்.

ஆத்தூர், கல்லநத்தம் கிராமத்தில் ஆனைவாரி அருவியில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். முட்டல் ஏரி அருகே உள்ள பூங்காவை சுற்றிபார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் சொக்கனூர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு கருப்பன் (65) என்பவர் பைக்கில் வீரகனூர் நோக்கி வரும் போது எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த சொக்கனூர் மணிகண்டன் 45 என்பவர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் மனைவி இந்திரா இருவரும் காயமடைந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விஜய்யுடன் கூட்டணி அமையுமா? இல்லையா?
என்பது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு. அ.தி.மு.க. தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டால் தான் கட்சி நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. அதை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன்’- சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.