India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடந்து வரும் அரசுப் பொருட்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மேலும் அரசுப் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டும், ராட்டினங்களில் சவாரி செய்தும்
பொதுமக்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூபாய் 608 ஆகவும், எக்ஸிகியூடிவ் வகுப்பில் பயணிக்க ரூபாய் 1,211 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூ. 792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை- பெங்களூரு ஆகிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் நடந்த விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

சேலம் தாதகாப்பட்டி குமரன் நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசுவை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இறந்த நிலையில் கிடந்த சிசுவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சென்று சிசுவை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவுச் செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு நேற்று வருகை தந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் சால்வை அனைத்து வரவேற்றனர், அருகில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சேலத்தில் இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பேசுகையில், தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் 1.50 லட்சம் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இந்து முன்னணி சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன என்றார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7 அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 31) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை (ஆக31) பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
இந்த வந்தே பாரத் ரயில், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பிரதமர் தொடங்கி வைக்கும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை, செப்.02ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாமை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.