Salem

News September 4, 2024

பட்டாசு குடோனில் தீ விபத்து

image

சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 4, 2024

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: சிறப்பு பேருந்து

image

நாடு முழுவதும் வருகிற 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி வெளியூர்களில் படிப்பவர் மற்றும் பணிபுரிபவர்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்லும் வகையில் சேலம் கோட்டம் சார்பில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மேட்டூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

News September 4, 2024

தமிழக வீரர் மாரியப்பன் சாதனை

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் டி63 உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 3 பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News September 3, 2024

விநாயகர் சதுர்த்தி பண்டிகை- சிறப்பு ரயில் அறிவிப்பு

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் செப்.06ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கும், செப்.08ம் தேதி கோவையில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

image

சேலம் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122

News September 3, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , கர்நாடகா மாநிலத்தில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே. செப்.04, 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , செப்.05, 07 ஆகிய தேதிகளில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News September 3, 2024

ஹாட்ரிக் பதக்கம் வெல்வாரா சேலம் மாரியப்பன்?

image

சேலம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016- ல் ரியோடிஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2021- ல் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்திய நிலையில், தற்போது பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் சேலம் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

News September 3, 2024

பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

image

சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் வேகமாக சென்றதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 3, 2024

புதிதாக 16 உதவி ஆய்வாளர்கள் நியமனம்

image

தமிழக காவல்துறையில் புதிதாக 444 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்திற்கு 10 காவல் உதவி ஆய்வாளர்களும், மாநகரத்திற்கு 6 காவல் உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 காவல் உதவி ஆய்வாளர்களும் அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

News September 3, 2024

மனுக்கள் மீது உடனடி தீர்வு அறிவுறுத்தல்

image

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இரா. பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு காண்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!