India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் இன்று (நவ.16) காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் ஒன்றான நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலத்தில் உள்ள புகழ்பெற்ற வ.உ.சி. பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை இன்று (நவ.16) வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.2,000க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கட்டான், மலைக்காக்கட்டான் தலா ரூ.550-க்கும், ஜாதி மல்லி ரூ.480-க்கும், சி.நந்திவட்டம் ரூ.1,000-க்கும், நந்தியாவட்டம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,269 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் இன்று (நவ.16), நாளை (நவ.17) மற்றும் வருகிற 23, 24-ந் தேதிகள் ஆகிய 4 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,264 வாக்குச்சாவடிகளில் நடைபெறும்.

சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், திருப்பூர், ஈரோடு, போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சேலத்தில் இன்று சனிக்கிழமை (16-11-24) காலை 10:30 அமைச்சர் ராஜேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், அரிசி பாளையம் பகுதியில் உள்ள செயின் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதி வண்டிகளை வழங்குகிறார். ஒய்.எம்.சி.ஏ ஹாலில் சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் மகளிர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடைபெற்று மாலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சேலம்: கலியனூரில் இருந்து ராயலூர் செல்லும் வழியில் உள்ள செட்டியார் காட்டில் மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள ”வாட்ஸ் அப்-பில்” தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து வனக்காப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்யவுள்ளனர்.

சேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தலைமையாசிரியர், குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம் 636008 முகவரியில் நவ.20 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, சேலம் வழியாகச் செல்லும் கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவ.22, 29ல் மௌலா அலியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.24, டிச.01ல் கொல்லத்தில் இருந்து மௌலா அலிக்கும், நவ.18, 25ல் மச்சிலிப்பட்டணத்தில் இருந்து கொல்லத்திற்கும், நவ.20, 27ல் கொல்லத்தில் இருந்து மச்சிலிப்பட்டணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில், மகளிர் சுய உதவிக்கு உதவிக்குழுக்களுக்கு வர வேண்டிய கடன் தொகை வழங்காமல், போலியாக போலியாக தயாரித்து ரூபாய் 2.45 கோடி கையாடல் செய்த, பந்தன் வங்கியின் கிளை மேலாளர் மனோஜ்குமார், காசாளர் மல்லிகமணி உட்பட எட்டு பேர் மீது மத்திய குற்றப் குற்றப்புலனாய்வு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக கச்சிகுடா- கோட்டயம் இடையே சிறப்பு ரயில் (07131/07132) இயக்கப்படவுள்ளது. நவ.17, 24 ஆகிய தேதிகளில் கச்சிக்குடாவில் இருந்தும், மறுமார்க்கத்தில் நவ.18, 25 ஆகிய தேதிகளில் கோட்டயத்தில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.