India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤சேலம் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ➤ரேஷன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு ➤அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: சாலை மறியல் ➤வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் ➤மேலும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி விலகல் ➤ உடற்பயிற்சியின் போது ஜிம்மிலேயே உயிரிழந்த நபர் ➤சேலத்திற்கு வருகை தரும் அமைச்சர் ➤தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு ➤சேலம் எனப் பெயர் வந்தது எப்படி?.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

கோவை – பரவுனி சிறப்பு ரயில் (03358) கோவையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வழியாக நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கு இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பரவுனி சென்றடையும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் “வீரத்தமிழர் முன்னணியின் ” சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆகிய நான் இன்று (நவ.19) முதல் கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்றும், தலைவரின் வழியில் தமிழ்தேசிய பாதையில் தொடர்வேன் என வைரம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். நா.த.க.வின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர்.

சேலம் மாநகரம், கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜிம் உரிமையாளரான மகாதீர் முகமது (35) மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக ஜிம்மிலேயே உயிரிழந்தார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து வந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நவ.20-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரு கலையரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான 71-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில், புதிய நியாய விலைக்கடை கட்டடங்களைத் திறந்து வைத்தும், புதிய கூட்டுறவு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் வரும் நவ.25ஆம் தேதி நடைபெற உள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோர் துணி நூல் துறை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் dd.textile.salem.regional@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மலைகளால் சூழ்ந்து காணப்பட்டதால் “சைலம்” என்று அழைக்கப்பட்டு அது “சேலம்” என மருவியதாகவும். சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு சேலம் என மருவியதாக கூறப்படுகிறது. மேலும், சேலை நெசவுக்கு பெயர் பெற்று சேலையூர் என்ற பெயர் “சேலம்” என காலப்போக்கில் மருவியதும் என கூறுவார்கள். எனவே, சேலம் மக்களே உங்க ஊர் பெயர் எப்படி வந்தது என கமென்ட் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.