Salem

News November 20, 2024

71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

image

சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று (நவ.20) கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, சேலம், கள்ளக்குறிச்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

News November 20, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

இணைப்பு ரயில்களின் வருகை தாமதம் காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) இன்று (நவ.20) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.05 மணிக்கும், கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

News November 20, 2024

ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு

image

“தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வரவு, செலவுக் கணக்குகளைத் தொடங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். 

News November 20, 2024

நாதகவில் இருந்து மேலும் ஒருவர் விலகல் 

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் நகர துணைத் தலைவராக உள்ள ஜீவானந்தம் ராஜா கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் அறிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து மேலும் 40 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாதக-வில் இருந்து தொடர்ந்துஅடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News November 20, 2024

CRIME TIME(1): யார் இந்த “தார் கேங்”

image

சேலத்தில் உள்ள தொட்டில்பட்டி அருகே 60 வீடுகள் கொண்ட குடியிருப்பில், கடந்த 7ஆம் தேதி 12 வீடுகளின் கதவுகள் உடைத்து 13 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், இது “தார் கேங்கின்” வேலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். யார் இந்த “தார் கேங்” (படிக்க அடுத்த பக்கம் திருப்புங்க)

News November 20, 2024

CRIME TIME(2): யார் இந்த “தார் கேங்”

image

ம.பி. தார் மாவட்டத்தில் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை “தார் கேங்” என்பார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் வீட்டின் தாழ்ப்பாளை கட்டிங் பிளேடால் உடைத்து கொள்ளையடிப்பது இவர்களது நேர்த்தி. கொள்ளை அடிப்பதற்கு முன் தங்களது குலதெய்வத்தை வழிபட்டு செல்வார்கள். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நடப்பதற்கு முன் இந்த கேங்கை சுற்றி வளைக்குமாக போலீஸ்?

News November 20, 2024

சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் மாற்றம்

image

பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக, சேலம் வழியாக செல்லும் சில ரயில்கள் இன்று (நவ.20) மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. பாலக்காடு- சென்னை சென்ட்ரல் ரயில் (22652) சென்னை கடற்கரை வரையிலும், ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (22650) பெரம்பூர் வரையிலும், ஆழப்புலா-சென்னை சென்ட்ரல் ரயில் (22640) ஆவடி வரை இயக்கப்படும்.

News November 20, 2024

சேலத்தில் நாளை இங்கு மின்தடை 

image

சேலம் மாவட்டத்தில் நாளை(21.11.24) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அஸ்தம்பட்டி, சங்ககிரி, உடையாப்பட்டி, தும்பல் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(21.11.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, இத்துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள ஊர்களில் மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது.

News November 20, 2024

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய (நவ.20) நிகழ்ச்சிகள்: 1)காலை 9 மணி – அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி. 2) புனித பால் மேல்நிலைப்பள்ளிகாலை 9 மணிக்கு உலக உணவு தினத்தை ஒட்டி விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நவதானிய உணவு கண்காட்சி நடைபெறுகிறது. 3) காலை 10 மணிக்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்கின்றனர்.

News November 20, 2024

சேலம்: கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கிராம கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

error: Content is protected !!