India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகராட்சி கன்னங்குறிச்சி புது ஏரியில் முழுவதும் நிரம்பி இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பாதைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.02) காலை 06.00 மணி வரை 1,235.8 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, ஏற்காட்டில் 238 மி.மீ., ஆனைமடுவுவில் 100 மி.மீ., கரியகோவிலில் 149 மி.மீ., ஓமலூரில் 99 மி.மீ, டேனீஷ்பேட்டையில் 96 மி.மீ., ஏத்தாப்பூரில் 80 மி.மீ., வீரகனூரில் 63 மி.மீ., கெங்கவல்லியில் 60 மி.மீ., தம்மம்பட்டியில் 64 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

1.சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
2.சேலத்தில் பல்வேறு பகுதியில் மழை
3.உத்தமசோழபுரத்தில் 1,008 சங்காபிஷேகம்
4.முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
5.ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
6.வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு அறிவுறுத்தல்

ஃபெங்சல் புயல் காரணமாக சேலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ஏற்காடு செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.2) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக மாநகர காவல் துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி நடைபெறுகிறது. இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாநகரப் பகுதி முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் தொடர்ந்து, விபத்து, கொலை, போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றன .குற்ற நடைபெறாமல் இருக்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூசணிக்காய் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டதாக வீடியோ வைரல் வைரலானது. ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரனை, சேலம் ஆயுதப்படைக்கு தற்காலிக பணியிடம் மாற்றம் செய்து சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம்கோயல் நேற்று உத்தரவிட்டார்.

சேலம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளான பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான தேர்வு முகாம், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் டிசம்பர் 04-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் தேர்வுச் செய்யப்படுவோருக்கு இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.