India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, கொண்டலாம்பட்டி சீரங்கன் தெருவில் கால்வாய் உடைந்து மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் வீடுகளை சூழ்ந்துக் கொண்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 238 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வாழப்பாடி-58, ஆனைமடுவு-100, ஆத்தூர்- 56, சேலம் -59, தம்மம்பட்டி-64, கெங்கவல்லி-60, ஏத்தாப்பூர்- 80, கரியகோவில் – 149, வீரகனூர்-63, நத்தகரை-25, மேட்டூர் – 44, எடப்பாடி -20.4, ஓமலூர் – 99, சங்ககிரி -24.4, டேனிஷ்பேட்டை- 96 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,235.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

2023-2024-ஆம் நிதியாண்டில் மட்டும் சேலம் விமான நிலையம் ரூபாய் 99 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் விமான சேவை தொடங்கப்பட்டது. அதேபோல் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடப்பாண்டின் அக்டோபர் மாதம் வரை 1,19,025 பயணிகளை சேலம் விமான நிலையம் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் (14.12.24) அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ள வேண்டும் என இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். டிச 2 இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் (டிச.02), நாளையும் (டிச.03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் ஏரிக்கரை ரோடு ஒலப்பாடி செல்லும் வழியில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்துள்ளது. அதை அந்த பகுதி மக்கள் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக, கடந்த 2 நாட்களாக சென்னை- சேலம், சேலம்- சென்னை இடையேயான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ரத்துச் செய்திருந்த நிலையில் இன்று (டிச.02) மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இதனால் சேலம் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம்-சென்னை பயண டிக்கெட் முன்பதிவும் இண்டிகோ இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.