India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2024 மக்களவைத் தேர்தல், தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடவுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றபோது, இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியில் அடங்கும்.
2024 மக்களவைத் தேர்தல், சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி போட்டியிடவுள்ளார். இவர், 1991இல் நாமக்கல் எம்எல்ஏ-வாகவும், 1991 – 1996 ஆண்டுகளில் உள்ளூராட்சி அமைச்சராகவும் இருந்துள்ளார். 1999 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2008இல் அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வின் 11 புதிய வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 224 மது பாட்டில்கள் நேற்று(மார்ச் 20) பறிமுதல் செய்யப்பட்டது. வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் அருகே சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியிலிருந்து வந்த காரை சோதித்தில், ரூ.62,000 மதிப்புள்ள 224 மதுபாட்டில்களை அனுமதியின்றி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
2019 மக்களவை தேர்தலில், சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் என்பவர் 4,59,376 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதிய வேட்பாளராக பி.விக்னேஷ் போட்டியிடுவதாக அதிமுக தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் என்பவர் 6,06,302 வாக்குகள் பெற்று எம்பியாகி இருந்தார். இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதிக்கு திமுக சார்பில் புதிய வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக செல்வ கணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.