India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட வடசென்னிமலை கோயிலில் நேற்று(மார்ச் 27) இரவு சப்தாவர்ணம் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று(மார்ச் 28) அதிகாலை 2 மணி அளவில் மலையில் கடை வைத்திருந்தவர்கள் பிக்கப் வேனில் கீழே வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்த நிலையில் பழனியப்பன் என்பவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, நேற்று(மார்ச் 27) சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூடுதல் சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.
வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், மகன் அஜித்குமார்(25). பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக, 2023 அக்டோபரில் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, இவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதிச் செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17,18 படி கிரிமினல் குற்றம் ஆகும். மேலும் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் டீ கொடுத்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உங்கள் ஓட்டை எனக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்
2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலாக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் இன்று மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரம்மாக இறங்கியுள்ளன. அதன்படி, சேலம் தெற்கு தொகுதிகுட்பட்ட பகுதி, கோட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 181 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 43,270 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 936 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.