India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எடப்பாடி அருகே உள்ள அரியாம்பாளையம் பகுதியில் +1 படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது . தேர்வு நடைபெறும் நிலையில், படிப்பில் மகள் கவன குறைவாக இருப்பதாக கூறி தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் நவீன லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி காடையாம்பட்டி, இளம்பிள்ளையில் 23ஆம் தேதி, கருமந்துறையில் 24ஆம் தேதி, மகுடஞ்சாவடியில் 25ஆம் தேதி, நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30ஆம் தேதி குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வ கணபதி ஆதரித்து இன்று சேலம் உழவர் சந்தை மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களிடம் தமிழக முதல்வர் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற வேட்பாளர் டி எம் செல்வ கணபதி ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார் அருகில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி முதல்வருக்கு பொன்னாடை வழங்கி வரவேற்றார். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை நடைபெறவுள்ள சேலம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக கமல்ஹாசன் இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். இன்று ஈரோட்டிலும் நாளை சேலத்திலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சேலத்திற்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மலையரசன், சேலம் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதி ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை மாலை 6 மணி அளவில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அண்ணா திடலில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், போலி மற்றும் காலாவதியான குளிர்பானங்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து குளிர்பானங்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்குமாறு சேலம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.
சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உட்பட 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது வேட்பு மனு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று(மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.