India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,232 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூபாய் 59.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும், 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விபத்தை ஏற்படுத்திய 77 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்காக, தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் பொருந்தும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் (2021-2025) 7.5% இட ஒதுக்கீடு மூலம் மொத்தம் 1,903 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவு செய்ய சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 12.25 லட்சம் மானியத்தில் மாம்பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுவைச் சோ்ந்த விவசாயிகள் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களே இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் கோரி 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகைக் கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை பழங்குடியினர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்களில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஆக.31- ஆம் தேதி கடைசி நாளாகும். மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை, காலணி, சைக்கிள், சீருடை, வரைப்படக் கருவி, பேருந்து பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 12,342 விவசாயிகளுக்கு ரூபாய் 67.46 கோடி கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ரூபாய் 14,000-ம், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூபாய் 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது, எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
சேலம் மக்களே.. விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார். இதனை உங்கள் பகுதி விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.