India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சேலம், ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (32). இவருக்கும் வினோத், சண்முகம் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் முருகானந்தத்தை கத்தியால், தலை, வலது தோள்பட்டை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மற்றும் அறியாத மின்னஞ்சல் இணைப்புகளை திறக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய மோசடிகளை தவிர்க்க விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <

இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் சேலம் வந்த தமிழக முதலமைச்சருக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். மேலும் அதன் பின்னர் சாலை மார்க்கமாக சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு புறப்பட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள்: நவ.10.ஆகும்:உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக கேரளா மாநிலம் கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் நவ.19 முதல் ஜன.21 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கும், நவ.20 முதல் ஜன.22 வரை கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் ரயில்கள் 06119/06220 இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

சேலம் மக்களே உங்களுக்கு காளானை வளர்க்க பிடிக்குமா? அதை வைத்து பெரிய தொழில் ஆரம்பிக்க ஆசையா ? மிஸ் பண்ணீடாதீங்க பனமரத்துப்பட்டி சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஒருநாள் இலவசப் பயிற்சி வரும் நவ.05- ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடக்கவுள்ளது. முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விவரங்களுக்கு 90801-86667, 94435-09438 அழைக்கவும்!ஷேர் பண்ணுங்க

சேலம் அம்மாபேட்டை, பாப்பாரப்பட்டி,செங்கல்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பேர், நேற்று கடலூர் திட்டக்குடியில் நடைபெற இருந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் சென்றனர். ராமநத்தம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை!
Sorry, no posts matched your criteria.