India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(ஏப்.4) மாலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை என கூறினார்.
ஆத்தூர் அருகேயுள்ள தண்டவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இந்நிலையில் கருப்பண்ணனின் மனைவி மாரியம்மாளும் மகன் ராஜாவும் சேர்ந்து சொத்தை எழுதி வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 03) இரவு வரை நடைபெற்ற நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் சோதனை மூலம் ரூபாய் 1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்தார்.
2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று(ஏப்.3) இரவு முழுவதும் விடிய விடிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று(ஏப்.3) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் மூலம் ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசுகையில், சுவரில் சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என திமுகவினர் மிரட்டுவதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். உரிமைத் தொகையை நிறுத்தினால் சும்மா விட மாட்டேன். திமுகவின் தில்லுமுல்லுவை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும் என்றார்.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் சேலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஓமலூரில் நேற்று(ஏப்.3) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். மேலும் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் ,திமுக தேர்தல் பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப அலைகள் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென சேலம் மாநகரில் மிதமான முதல் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) நடத்தும் சூப்பர் கிங்ஸ் அகாடமியில், ஏப்.6ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. 6 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மாணவ சேர்க்கைக்கு 73054 22282 தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு www.superkingsacademy.com என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.