India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், வாழப்பாடி அருகே நெடுஞ்சாலை பகுதியில் வாழப்பாடி போலீசார் வாகன சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தலைவாசல் வரகூர் மருதையான் மகன் சிவபாலன் ( 35 ) என்பவர் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருளை வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-8) மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் சேலம் அண்ணா பூங்கா பின்புறம், தமிழ் சங்கத்தில் நாளை நடைபெறும் முகாமில் அசல் சான்றிதழுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு
வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாநகரில் 25 ஆண்டுகள் பணி முடித்த 51 பேருக்கு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கி கமிஷனர் விஜயகுமாரி இன்று உத்தரவிட்டார். இவர்களுக்கு கூடுதலாக ரூ.3ஆயிரம் சம்பளம்
கிடைக்கும். முன்கூட்டியே அறிவிக்கபடவேண்டிய இந்த பதவி உயர்வு தேர்தல் காரணமாக தாமதமாக இன்று வழங்கப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைச் செய்தார். அதிமுக சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழகம் முழுவதும் பரப்புரைச் செய்தேன். தேமுதிகவின் பிரேமலதாவும் பரப்புரைச் செய்தார் எனத் தெரிவித்தார்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) காலையிலும் வானம் இருள் சூழ்ந்து, பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர் சாரல் மழையால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) மாணாக்கர் முதல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 11-ஆம் தேதி அன்று கலை வணிகவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளதாக சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இன்று அறிவித்துள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) மாணாக்கர் முதல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 11-ஆம் தேதி அன்று கலை வணிகவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளதாக சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இன்று அறிவித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 48 வயது மதிக்கப்பட்ட நபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட கைக்கு சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. 14 நாட்களுக்குப் பிறகு அவரது கை நன்கு குணமாகிய நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இச்சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் Dr.சுந்தர்ராஜன், மருத்துவ இயக்குனர் Dr.அபிராமி பாராட்டினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 06) மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.