Salem

News March 18, 2024

சேலத்தில் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை

image

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.2 டிகிரி செல்ஸியஸ்; 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் நாள்தோறும் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News March 18, 2024

10 ஆண்டுகளுக்கு பின் சேலம் வரும் மோடி

image

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை மதியம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலம் வருகை தர இருப்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 18, 2024

சேலம் விமான நிலையம்: வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

image

பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இன்று சேலம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுச் செய்தனர். அதேபோல், ஓமலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

சேலம்: 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

image

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வர். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News March 18, 2024

நல வாரியங்கள் மூலம் ரூ.68.38 கோடி நலத்திட்டம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த 2.5 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 97,761 பேருக்கு ரூ.68.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு மற்றும் இதர 16 வகை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் பிரிவில் 83,553 பேருக்கு கல்விக்காக மட்டும் ரூ.18.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

சேலத்தில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில், திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

News March 18, 2024

சேலம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

image

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சேலம் வர உள்ள நிலையில், விமான நிலையத்தில் வந்துச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், சேலம் விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News March 18, 2024

வாழப்பாடி: கட்சிக் கொடிக் கம்பங்கங்கள் அதிரடி அகற்றம்

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து பொது இடத்தில் நடப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று(மார்ச் 17) அதிரடியாக அகற்றினர்.

News March 18, 2024

சேலம்: ஆர்வத்தோடு தேர்வெழுதிய முதியவர்கள்!

image

’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.

News March 18, 2024

சேலம்: மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து

image

மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பெட்டியில் மனுக்களாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!