India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 17) மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
2022-23 ஆண்டில் ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அமைச்சர் கே.என்.நேருவை அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ ராஜேந்திரன், எம்.பி. செல்வகணபதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சோதாராம். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். இவர் தற்போது வசிக்கும் தெருவில் ஹார்டுவேர் பெயின்ட் கடை வைத்துள்ளார். நேற்று(ஜூன் 16) மதியம் 1 மணிக்கு ஹெல்மெட் எடுக்க கடையை திறந்தபோது, கடையின் மேற்கூரை வழியே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7.50 லட்சத்தை திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.16) மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சென்னையை சேர்ந்த ராஜேஷ் குமார், தினேஷ் ஆகியோர் கெங்கவல்லி, சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தரனீஸ் என்பவருடன் கெங்கவல்லிக்கு பைக்கில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது கெங்கவல்லி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் ராஜேஷ் குமார் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்து அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. இதையடுத்து ஜல் ஜீவன் சர்வேக்ஷான் 2023 பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவியிடம் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் வழங்கினார்.
சேலம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் வரும், 18 – 26 வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதரவற்ற விதவை சான்றிதழ் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற மனுக்கள் தரலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நீதிமன்றத்தின் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞராக வக்கீல் எஸ். அருள் என்பவரை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தா தேவி நியமனம் செய்துள்ளார். இவருக்கு சக வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக கூடுதல் பொறுப்பிற்காக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் கதிரவன் ஆகியோருக்கு 50 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த தொகை மீது உரிய விசாரணை நடத்தி அதை மீண்டும் பல்கலைக்கழக நிதியில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.