Salem

News April 16, 2024

சேலம்: மாம்பழ வரத்து தொடங்கியது

image

சேலம் சந்தைக்கு மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சேலம் பெங்களூரா , சேலம் குண்டு, இமாம் பசந்த் உள்ளிட்ட ரக மாம்பழ வரத்து தொடங்கியுள்ளது. தற்போது ஒரு டன் அளவில் மாம்பழ வரத்து உள்ள நிலையில் விரைவில் 5 டன் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ.200 முதல் ரூ.280 வரை விற்பனை ஆகிறது.

News April 16, 2024

சேலம்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

சேலம் உருக்காலை திட்டத்திற்காக கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாற்று இடமாக வட்டமுத்தாம்பட்டி காமராஜ் நகரில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை கொடுக்கப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே மக்களவை தேர்தலை புறக்கனிக்க போவதாக அப்பகுதி மக்கள் இன்று அறிவித்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

News April 16, 2024

சேலத்தில் 103.7 டிகிரி வெயில் பதிவு

image

அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே சேலத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.15) 103.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மதிய நேரத்தில் வெப்பத்தை தவிர்க்க பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்து வருகின்றனர். இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

News April 16, 2024

சேலம்: சம்பளத்துடன் கூடிய விடுமுறை

image

சேலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டட மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தினகரன் நேற்று(ஏப்.15) தெரிவித்துள்ளார். இது குறித்து புகார்கள் இருந்தால் 95973 86807 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல்-14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 15, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு 

image

காட்பாடி -அரக்கோணம் இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 17, 24, 30ம் தேதி ஆகிய நாட்களில் கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை -காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து புறப்படும் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 15, 2024

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு: இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில். அதிமுக ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. திமுக ஆட்சியில் அதற்கான காலத்தை நீடித்து தராததால் காலாவதியானது என்றார்.

News April 14, 2024

சேலம்: சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

image

சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ஆட்சியராக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகிற 17, 18-ந் தேதிகளில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

News April 14, 2024

5,486 போலீசார் தபால் வாக்கு பதிவு

image

மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தபால் வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 5,486 போலீசார் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விடுபட்டவர்கள் நாளை கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!