India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நேற்று நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக முதன்மை தேர்வர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் வணிகப்பகுதி உள்ளடக்கிய தொலைத் தொடர்பு சேவையை BSNL வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக வாழப்பாடி அருகே உள்ள சந்தமலையில் இன்று BSNL 4ஜி தொலைத்தொடர்பு கோபுரத்தை தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் தமிழ்மணி திறந்து வைத்தார்.
இளநீர் லோடுடன் இன்று சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இளநீர் சாலையில் சிதறியது. இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாரமங்கலம் அருகே நேற்று காரில் சென்ற பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ரவி, முன்னாள் எம்.பி.யின் மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். எம்.பியின் மகன் செந்தில்குமாரிடம் 1.50 லட்ச ரூபாய் பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஓமலூர் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சேலம், மெய்யனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
சேலம், மெய்யனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
சேலம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம் எம்.பாலப்பட்டி ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெற்றோர் கூறிய நிலையில், குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரான பெயர் தமிழ்செல்வன் என்று சூட்டினார்.
ஒவ்வொரு முறையும் இந்த மண்ணுக்கு வந்தால் எனக்கு நினைவுக்கு வருவது அண்ணன் வீரபாண்டியார் தான்.
சமுதாயத்திற்கு தலைவராக இந்த மண்ணிலே அவர் வாழ்ந்தார். சேலம் மாவட்டம் வளர்ச்சி பெற வீரபாண்டியார் காரணமாக இருந்திருக்கிறார். தி.மு.க. வீரபாண்டியாரை முற்றிலும் மறந்துவிட்டது’ என்று சேலத்தில் இன்று
நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அழகப்பம்பாளையம் பகுதியில் நீர்நிலைகளில் அருகாமையில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நேற்று (ஏப்ரல் 10) இரவு சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. பனை மரங்களை எரித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகர காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவும், குகை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.