India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும், ரசாயனம் மருந்து உரங்களை குறைத்து, இயற்கை முறையில், உயிரி கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்தி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, சாகுபடி செலவை குறைத்து பயன்பெற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதால் சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முடியாது என்றார்.
ஈரோடு மாநகராட்சியில் இளநிலைப் பொறியாளர்களாகப் பணியாற்றி தற்போது கட்டாய காத்திருப்போர் பட்டியலில் உள்ள நாட்ராயண்சாமி, சந்திரசேகரன், செந்தாமரை, சிவக்குமார், சரவணன், பாலசுப்பிரமணி, நவநீதன், இளங்கவி ஆகிய 8 பேரும் சேலம் மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன்ரெட்டி பிறப்பித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட கவிஞர்கள் தமிழ் அறிஞர்கள் சான்றோர்கள் ஆகியோர் 2025ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வருகின்ற 12ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் இன்று (02.09.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சேலத்தில் உள்ள அனைத்து விதமான மதுபானம் கடைகள், மதுபானக்கூடங்கள், திறக்க கூடாது என்றும், தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி திறக்கும் கடைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு <
சேலம் மாவட்டத்தில் வரும் செப்.4ஆம் தேதி சிறுவாச்சூர் சமுதாயக் கூடம், தொளசம்பட்டி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வெங்கடேஷ்வரா திருமண மண்டபம், மேட்டூர் அணை -1 பாப்பம்மாள் திருமண மண்டபம், சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: கொளத்தூர் அடுத்த சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நிக்காஸ் அருகிலுள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்ம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
▶️காலை 9 மணி இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளையின் சார்பில் தர்ணா போராட்டம் சங்க கட்டிடம் முன்பு 5 ரோடு ▶️காலை 9 மணி ஓமலூர் கருக்கல்வாடி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு ▶️மாலை 6 மணி ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு சாமி ஊர்வலம்▶️
சேலத்தில் நாளை(செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️செட்டிமாங்குறிச்சி காளியம்மன் கோவில் மண்டபம் நாச்சிபாளையம்
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை
▶️அசிரா
மணி குள்ளம்பட்டி சமுதாயக்கூடம்
▶️ஓமலூர் சமுதாயக்கூடம் செங்கரடு
▶️ கெங்கவள்ளி கிருஷ்ணவேணி ராமலிங்க செட்டியார் திருமண மண்டபம் ஆட்டுக்காரன் வளைவு ▶️நங்கவல்லி ஆர் கே எஸ் திருமண மண்டபம் மூலப்புதூர்
Sorry, no posts matched your criteria.