Salem

News October 15, 2025

சேலத்தில் வடமாநில தொழிலாளி விபரீத முடிவு!

image

சேலம் அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள மர அறுவை மில்லில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சன்னிமண்ஜி என்பவர் தனது குடும்பத்துடன் தங்கிப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று சன்னிமண்ஜி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 15, 2025

சேலத்தில் பைக் மோதி முதியவர் பலி!

image

சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரைச் சேர்ந்த 65 வயது சண்முகம் என்பவர் சாரதா கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 15, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம்: ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 14, 2025

சேலம்: தொடர் வழிப்பறி குற்றவாளி மீது குண்டாஸ்

image

சேலம்: கிச்சிப்பாளையத்தில் கடந்த செப்.15ஆம் தேதி அருண்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி வழிபறி செய்த வழக்கில் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இதுபோன்று பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாலும் பல காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.

News October 14, 2025

சேலத்தில் 5 பேர் மீது குண்டாஸ்!

image

சேலம்: வேடுகாத்தான் பட்டியில் கடந்த அக்.16ஆம் தேதி நடந்த கோயில் திருவிழா தகராறில் மோகன்ராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தங்கராஜ், இளங்கோ, சூர்யா, பிரகாஷ், கவின் ஆகிய ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.

News October 14, 2025

சேலத்தில் பட்டாசு விற்பனை தீவிரம்!

image

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் சேலத்தில் பட்டாசு கடைகளில் புதியவகை ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனர். மேலும், சேலம் 5 ரோடு, குரங்கு சாவடி, அழகாபுரம் , திருவா கவுண்டனூர் பைபாஸ் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

சேலத்தில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலத்தில் நாளை அக்டோபர் 15 புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அம்மாபேட்டை சோழிய வேளாளர் திருமண மண்டபம் நாராயண நகர்2) தலைவாசல் ஏ எஸ் மஹால் சாத்தப்பாடி 3)கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம்4)ஓமலூர் வி பி ஆர் சி கிராம சேவை மைய கட்டிடம் 5)காடையாம்பட்டி ஸ்ரீ ராமச்சந்திரா மஹால் காருவள்ளி 6)சங்ககிரி பருவத ராஜகுல திருமண மண்டபம் காவேரிப்பட்டி.

News October 14, 2025

சேலம்: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

image

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே<> இந்த லிங்க்கில்<<>> சென்று உங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் நில அளவைக்கு பதிவிடவும் விண்ணப்பிக்கலாம். அரசின் புறம்போக்கு நில விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

சேலம்: தந்தை கண்முன்னே குழந்தை பலி

image

சேலம், குரங்குச்சாவடி அருகே நேற்று அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஜனாஸ்ரீ (4 வயது) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்து கால்கள் உடைந்த நிலையில், சிறுமியின் தந்தை தங்கராஜ், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் விபத்து குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2025

சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

error: Content is protected !!