Salem

News April 5, 2025

பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

News April 5, 2025

சேலத்தில் நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

image

ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சேலம் மேற்கு வட்டம் மஜ்ரா கொல்லப்பட்டி, இரும்பாலை மெயின் ரோடு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறுகிறது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

‘படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவி’

image

“சேலம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 622 திருநங்கைகளில் 569 பேருக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு முகாம் நடத்தி விரைவில் அடையாள அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்; படிக்க விரும்பும் திருநங்கையருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

சனி, ஞாயிறுகளில் வரி வசூல் மையங்கள்!

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் நடப்பாண்டிற்கான தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய வழி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். மேலும், பொதுமக்கள் நலன் கருதி வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2025

சேலத்தில் இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

image

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) இந்த <>லிங்க்கில் <<>>உள்ள Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் 18-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதை மற்றவர்கள் பயன்பெற SHARE செய்யுங்கள்!

News April 5, 2025

சேலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி!

image

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள வெள்ளாளக்குண்டம் கிராமத்தில் உலகிலேயே மிகப்பெரிய நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. 45 அடி உயரம் கொண்ட அதிகார நந்தி சிலையின் வயிற்று பகுதியில் பக்தர்கள் சென்று தியானம் செய்ய தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார நந்திச் சிலையை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.

News April 4, 2025

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாறு

image

தென்னிந்நிய சினிமா வளர்ந்தது கோடம்பாக்கம் என்றாலும், அதனின் தொடக்கம் சேலம் தான். ஆம், சேலத்தை மையமாகக் கொண்ட ’மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் இந்தி, சிங்களம் உட்பட பல மொழிகளில் 150 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மலையாள சினிமாவின் முதல் பேசும் படத்தை தயாரித்த பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும். ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் தான் இந்திய சினிமா பரிணாமத்தின் நுழைவு வாயில்.

News April 4, 2025

டிக்கெட் இன்றி பயணம்: ரூ.22.14 கோடி அபராதம் வசூல்!

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

News April 4, 2025

சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

image

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

News April 4, 2025

சேலம் மாவட்டம் உருவான தினம்!

image

இன்று (ஏப்ரல் 04) சேலம் மாவட்டம் உருவான நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மாவட்டமாக உருவான சேலம், இன்று 234-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் எழில்மிகு ஏற்காடு, சேகோ ஜவ்வரிசி, சேலத்து மாம்பழம், கோட்டை மாரியம்மன் கோயில், கஞ்சமலை, சங்ககிரி கோட்டை, சேலம் வெண்பட்டு, உள்ளிட்டவை சேலம் மாவட்டத்தின் வரலாற்றை பறை சாற்றுகின்றன.

error: Content is protected !!