Salem

News July 2, 2024

துணைவேந்தர் பதவி நீட்டிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவி நீட்டிப்புக்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களை சந்தித்த அவர், ஊழல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவருக்கு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என்றும், போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

News July 1, 2024

மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் (ஜூலை 05)-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.

News July 1, 2024

நான்கு ஆண்டுகளாக சேலம் முதலிடம்

image

சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று (ஜூலை.1) நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News July 1, 2024

சேலம் கலெக்டர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை.09 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி காலை 9 மணிக்கு சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

News July 1, 2024

துணைவேந்தராக ஜெகந்நாதன் மீண்டும் பதவியேற்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஜெகந்நாதன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணைவேந்தர் பணியைத் தொடரும் கோப்பில் கையொப்பமிட்டு ஜெகந்நாதன் பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் (ஜூன் 30) அவரது பதவி முடிவடைந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜெகந்நாதனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புச் செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண் துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News June 30, 2024

துணைவேந்தர் பணி நீட்டிப்பு: கருத்து கேட்பு கூட்டம்

image

சேலம் பெரியார் பல்கலை கழக துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக தொழிலாளர் சங்கம், ஆசிரியர் சங்க கருத்துக் கேட்பு கூட்டம் பல்கலைக் கழக நுழைவாயிலில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக நாளை மாலை பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக வாயில் முழக்க கோஷம் நடைபெறும் என்றும். அடுத்த கட்ட நடவடிக்கை தொழிலாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

News June 30, 2024

பதவி தர மறுப்பது சமூக அநீதி: ராமதாஸ் கண்டனம்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவர் பதவிக்கு பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து, வெங்கடேஸ்வரனை நியமித்தது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மூத்த பேராசிரியை தனலட்சுமிக்குதான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News June 29, 2024

ஜவுளி பூங்கா அமைக்க மானியம் – ஆட்சியர் தகவல்

image

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அரசு மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர் துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின்ரோடு, சேலம் 636006 என்ற முகவரியிலோ, 0427-2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

சேலம் மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஏழு பேர் பதவி உயர்வு பெற்று இன்று (ஜூன் 29) முதல் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டனர். காத்தமுத்து, ராஜமாணிக்கம், பார்த்தசாரதி, காந்தி தேசாய், மனோகரன், நாகலட்சுமி, ராமகிருஷ்ணன் இவர்கள் ஏழு பேரும் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!