India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை, சேலம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை எஸ்.டி.சி/ஏ. அலுவலகம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் ஆகிய 2 இடங்களில் இன்று தொடங்கியுள்ளது. ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை மற்றும் கோவை அணிகள் மோதவுள்ளன.
கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான நிதி உதவியை அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
அறை எண் 110இல் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என முதல்வர் தெரிவித்தது தவறு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாரயம் விவகாரத்தில், அரசின் அழுத்தம் காரணமாகவே ஆட்சியர் தவறான செய்தியை வெளியிட்டார். சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். இதற்கு தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.
சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்திக்க டெல்லி போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய போராடாமல் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக பேசுவதாகவும், இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக என்றார்.
சேலம், எடப்பாடியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்தினால், அதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்றார்.
சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை குறித்தும், அத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், நேற்று ஆத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறும் தொகுதி, அது எப்படி தோற்றுப் போனது என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 49,127 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓமலூர் ஒன்றியத்தில் 4,286 பேர் உள்ளனர். மாவட்டத்தில் யாருடைய பெயரும் விடுபடாமல் கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து நடத்தி, 100% எழுத்தறிவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டிற்கான GST வசூலில் சேலம் GST கோட்டம் சாதனை படைத்துள்ளதாக சேலம் GST ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்று ஜிஎஸ்டி பவனில் நடந்த ஜிஎஸ்டி விழாவில் பேசிய அவர், GST வசூலில் தமிழக மாநகராட்சி அளவில் சேலம் முதலிடம். சேலத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.1,358.31 கோடியும், 2023- 24 நிதியாண்டில் ரூ.3,970.71 கோடியும் வசூலானது எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.