India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்டிகை கால சீசனை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, நாளை (டிச.27) பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நார்த்துக்கும், மறுமார்க்கத்தில், டிச.28- ல் திருவனந்தபுரம் நார்த்தில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06569/06570) இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (டிச 26) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (26-ம் தேதி) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, டிச.27-ல் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மறுமார்க்கத்தில், டிச.28-ல் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் (06569/06570) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் டிச.27-ம் தேதி காலை 11.30 மணிக்கு, ஆட்சியர் அலுவலக அறை எண்.115, மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு கண்டு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட வள பயிற்றுனர் பணி இடத்துக்கு எழுத்து, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. விண்ணப்பிப்போர் 25- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க, பேசுவதில் சிறப்புடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக அறை எண் 207-ல் உள்ள திட்ட இயக்குநர் அறையில் வரும் டிச.31 மாலை 5க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசுப்பள்ளி, அதன் உதவிப்பெறும் பள்ளி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 21,151 மாணவிகள், தமிழ் புதல்வன் திட்டத்தில் 14,808 மாணவர்கள் என மொத்தம் 35,959 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருவதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது. நேற்று (டிச.25) அதிகாலை முதல், சேலத்தில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை 11:00 மணிக்கு பெங்களூரு செல்லும், ‘இண்டிகோ’ விமானத்தை, சேலத்தில் தரையிறக்க முடியாமல், தாரமங்கலம் வரை இரு முறை வட்டம் அடித்து காலை 11:25 மணிக்கு தரையிறங்கியது. மீண்டும் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு சென்றது.

சேலம் மாவட்டம் (டிச.26) இன்று முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் உண்டியல் என்னும் பணி சுகவணேஸ்வரர் திருக்கோவிலில். 2) காலை 10:30 மணி சேலம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. 3) மாலை ஆறு மணி பழைய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.

சேலம், வாழப்பாடி உட்கோட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலைய எல்லை ஏத்தாப்பூர் பேரூராட்சி 4வது வார்டு அருகே உள்ள வசிஷ்ட நதி ஆற்றில் இன்று காலை 8.15 மணி அளவில் அரவிந்த் (29 )என்பவர் ஆற்றில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் பகுதிக்கு சென்று அரவிந்த் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.