India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள அழகப்பம்பாளையம் பகுதியில் நீர்நிலைகளில் அருகாமையில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நேற்று (ஏப்ரல் 10) இரவு சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. பனை மரங்களை எரித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகர காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவும், குகை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாவட்ட காவல் துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, சேலம் அரசு கலைக்கல்லூரி மற்றும் குகை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சாவடியில் 1,875 மாநகர காவலர்களும் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் ஆயுதப்படையை சேர்ந்த சுமார் 2,335 காவலர்கள் என மொத்தம் 4,210 பேர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பவளத்தானூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இவ்விழாவில் பொங்கல் வைபவம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவையொட்டி, வள்ளி கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடினார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) மாலை 04.30 மணிக்கு முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு – மேற்கு கால்வாயில் நீர் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல்
ஏப்ரல் 15ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்தார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக சேலம், காமக்கபாளையத்தைச் சேர்ந்த தயாநிதி, செல்லதுரை என்பவர்கள் ஆட்டோவில் வந்தனர். அப்போது நாவலூர் ஏரிக்கரை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் இருவர் பலியாகினர். இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மாவட்ட பா. ஜனதா தலைவராக இருப்பவர் சுரேஷ்பாபு. இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் வருமான வரித்துறை கூடுதல் உதவி இயக்குனர் வேணுகோபால் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் சுரேஷ்பாபு வீட்டில் சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆதரித்து எடப்பாடியில் இன்று
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது
இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; மனு நீதி பேசும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது பா.ம.க. 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசினார்.
தமிழர்களின் பாரம்பரிய சொத்தான கச்சத்தீவை தாரை வார்த்த கட்சி காங்கிரஸ் அப்போது இங்கு ஆட்சியில் இருந்தது திமுக,மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியது காங்கிரஸ், அப்போதும் இங்கு ஆட்சியில் இருந்தது திமுக காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது என்கிறது காங்கிரஸ் என்று சேலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.
Sorry, no posts matched your criteria.