India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் வேலை வாய்ப்பு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்கௌட் (SCOUT) திட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் 2 மாணவர்கள் பெரியார் பல்கலை. இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சேலம் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ்(12), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் சுதர்சன்(11). அரசு பள்ளியில் படித்து வந்த இவர்கள், பள்ளி விடுமுறை காரணமாக நேற்று(மே 8) மல்லி குட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை
1098 அல்லது 151 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார்.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் இயங்கி வருகிறது. இதனை அடுத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருத்துவ சோதனை செய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால், சேலம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் கோழிகள் இறந்து உள்ளது என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் முட்டை உற்பத்தி 20% குறைந்துள்ளது என தெரிய வருகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிநாட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 – 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி சேலம் உட்பட 12 மாவட்டங்களில் இன்று(மே 8) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜோலார்பேட்டையில் 17 பேரும், காட்பாடியில் 16 பேரும், ஓசூரில் 4 பேரும், சேலம் மற்றும் தர்மபுரியில் தலா 3 பேரும் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.7) மாவட்டத்தில் அதிகபட்சமாக 101.0 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.