India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால இலவச கால்பந்து பயிற்சியை வழங்குகிறது GMFC சேலம். ஏப்.01 முதல் மே 31 வரை GMFC கால்பந்து மைதானத்தில் மாலை 04.00 முதல் மாலை 06.00 மணி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியைப் பெற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு அழைப்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை<
சேலம் ஏப்ரல்.7 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்)▶️காலை 10 மணி மாவட்ட இசை பள்ளி ஆண்டு விழா (ஐயப்பன் கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகில்) ▶️காலை 9 மணி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு (அயோத்தியபட்டினம்) ▶️காலை 11 மணி இந்திய குடியரசு கட்சி செய்தியாளர் சந்திப்பு கூட்டம் (ஹோட்டல் சென்னிஸ்)
“மாணாக்கர்கள் சமூக வலைதளங்களை தங்களது ஆக்கப்பூர்மான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணாக்கர்கள் தங்களுக்கான விருப்பமுள்ள படிப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்குரிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்” என மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தல்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“பசூர்- ஊஞ்சலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, வரும் ஏப்ரல் 08, 11 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மேற்கண்ட ரயில் கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது” என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 பார்மசிஸ்ட் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
சேலம் : கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. இந்த ஒரு மாத கால இலவச பயிற்சி, தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 19 முதல் 45வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதில், விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.09 ஆகும். இதுகுறித்த விவரங்களுக்கு 7550369295, 9566629044 ஆகிய எண்களை அணுகவும்.
சேலம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் சட்டப்பேரவையில் பேசினார். அதில், சென்னைக்கு அடுத்த்படியாக 11 தொகுதிகளைக் கொண்டு சேலம் திகழ்வதாக பேசினார். அதுபடி, மேட்டூர், ஆத்தூர், சேலம் என மூன்றாக பிரிக்க வேண்டும் எனப் பேசினார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் எடப்பாடியை தனி மாவட்டமாக பிரிக்க பேச்சு எழுந்தது. சேலம் மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து?
சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் இயற்கை சூழ்ந்த மலைகளில் அமைந்துள்ளது கந்தாஸ்ரமம். இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கந்தனை வழிபட்டுச் செல்கின்றனர். முருகனும் அவ்ரது தாயார் பார்வதியும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இந்தக் கோயிலில் மட்டும் தான். இங்குள்ள முருகனை தரிசித்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.