India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா தினசரி எக்ஸ்பிரஸ்(22639), ஆழப்புலா- சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(22640), சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் தினசரி எக்ஸ்பிரஸ்(12695), திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ்(12696),கோவை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்(16618/16617) ஆகிய ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள்!
சேலம் மாவட்டத்தில் படிக்கத் தெரியாத 1.10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களில் முதற்கட்டமாக 70,000 பேருக்கு, 1,921 தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என கல்வியாளர்கள் கருத்து!
மிலாது நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (செப்.04) முதல் செப்.08- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், செப்.07- ல் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு செப்.07, 08- ல் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79,516 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 89,718 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் செயல்பட்டு வருகின்ற மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம், என சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி தெரிவித்துள்ளார்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.02) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 30.08.2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79,516 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 89,718 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மக்களே, பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 9 கார்கள் 68 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறையின் சார்பில், அறிக்கையில் 77 வாகனங்கள் வருகின்ற செப்டம்பர்- 8,9 ஆகிய இரு நாட்கள் குமாரசாமிப்பட்டி மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் 94981-06539 மற்றும் 94981-68192 விபரங்களை தெரிந்து கொள்ளலாம், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.