India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி இ.காட்டூரில் 257 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 42 பேர் 49ஓ படிவத்தை பூர்த்தி செய்து அதில் எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டு போட விருப்பமில்லை என பதிவிட்டிருந்தனர். 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று குறிப்பிடத்தக்கது.
சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 321 வாக்கு சாவடிகளில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி 84.71 % வாக்காளர்கள் வாக்கு பதிவாகியுள்ளது என்று எடப்பாடி வட்டாட்சியர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்-19) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மக்களவைத் தொகுதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி
ஓமலூர் 61.1%, சேலம் வடக்கு 54.8%, வீரபாண்டி 64.62%, சேலம் தெற்கு 56.6%, எடப்பாடி 65.57%, சேலம் மேற்கு 54.52% மொத்த 60.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மணி நேரமே உள்ள நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று தியாகதுருகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். மேலும் திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார். பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு செலுத்த ஆர்வமாக வருகிறார் என்றும், திமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 55.620 அடியில் இருந்து 55.410 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 21.389 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி 250வது பூத்தில், இன்று அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 மூதாட்டி வாக்கு செலுத்த வந்துள்ளார். அப்போது, உள்ளே நுழைந்து வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி 6வது கோட்டம் சின்ன கொல்லப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை சேலம் மாநகராட்சி மேயரும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளருமான ஆ.இராமச்சந்திரன் வாக்குப்பதிவு செய்தார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு சென்று வாக்களித்தார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Sorry, no posts matched your criteria.