Salem

News January 5, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 5) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 5, 2025

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பருவ தேர்வு முடிவுகள், இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், மறு கூட்டல், மறு மதிப்பீடு, மற்றும் நகல்கள் பெறுவதற்கான ஜன.23 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 5, 2025

ஆவினில் ரூ.10 க்கு விற்பனையாகும் நெய்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ஆவினில் நெய் விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக ரூ.10-க்கு 15 மி.லி., ரூ.48-க்கு 50 மி.லி., ரூ.165-க்கு 200 மி.லி., ரூ.365-க்கு 500 மி.லி., ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவின் 15 மி.லி. முதல் 15 லிட்டர் வரை பல அளவுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2025

சேலம்; மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

நங்கவள்ளியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமியிடம், அவரது மகன் வெங்கடாசலம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2021 ஆண்டு வெங்கடாசலத்தை கடப்பாரையால் தாக்கியுள்ளார் பழனிச்சாமி. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம் இறந்து விட்டார். இந்த வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துநிலையில், விசாரணை முடிந்து பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

News January 5, 2025

ஓட்டப்பந்தயம் துவக்கி வைப்பு 

image

சேலம் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். வயதின் அடிப்படையில் பல்வேறு கிலோமீட்டர் தூர பிரிவு ஓட்டப்பந்தயத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

News January 5, 2025

நிற்காமல் சென்ற காரை விரட்டிப் பிடித்த போலீசார் 

image

சேலம் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் ஓமலூர் காவல்துறையினர் நேற்று (ஜன.04) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்த போது கார் நிற்காமல் சென்றது. விரட்டிச் சென்று காவல்துறையினர், காரை மடக்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். காருக்குள் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 4, 2025

சேலம்: இன்றய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன 4) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 4, 2025

பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது

image

சேலம், புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (67). இவரை அவரது தம்பி சிகாமணி மகன் செல்வராஜ்,( 30) நேற்று மது போதையில் கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று செல்வராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 4, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜனவரி 4) இரவு ரோந்து  அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 4, 2025

நிற்காமல் சென்ற காரை விரட்டிப் பிடித்த போலீசார் 

image

சேலம் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் ஓமலூர் காவல்துறையினர் இன்று (ஜன.04) அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்த போது கார் நிற்காமல் வேகமாக சென்றது. விரட்டிச் சென்று காவல்துறையினர், காரை மடக்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். காருக்குள் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை!

error: Content is protected !!