India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவருக்கு ஆட்டுக்குட்டியை சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் நகர செயலாளர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. வானம் இருள் சூழ்ந்து பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், அங்கு கடுங்குளிர் நிலவி வருகின்றது. மேலும் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.14) மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின்
கீழ் சேலம் மாவட்ட அரசு
இசைப்பள்ளி தளவாய்ப்பட்டியில் உள்ளது. இங்கு குரலிசை(பாட்டு),
நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய
கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 13 வயது
முதல் 25 வயது வரை உள்ள
ஆண், பெண் இருபாலரும் கல்வி உதவித்தொகையுடன் இசை பயில கலெக்டர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் ஐடிஐயில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் வாகன மெக்கானிக், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்த பாடப்பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இணையதளத்தில் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வரும் ஜூன் 12- ல் மேட்டூர் அணையை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. “ஒருபோக சாகுபடிக்காக வரும் ஆக.15 – ல் மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்; தற்போது ஆழ்துளை கிணறு மூலம் 75,000 ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யலாம்; குறுவை சாகுபடிக்கு மாற்றாக எள், உளுந்து ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடலாம்” என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பூங்காவாகும். இது 1981 இல் ஒரு சிறிய அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டு பின்னர் 69 ஹெக்டேர் வரை நீட்டிக்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் புள்ளிமான், சாம்பார் மான், வெள்ளை மயில், பொன்னெட் மக்காக், கிரே பெலிகன், குட்டி எக்ரேட், சாம்பல் ஹெரான், ஆமை, சதுப்பு முதலை, நட்சத்திர ஆமை, பிளம் தலை கிளி,பல வகையான வனவிலங்குகள் உள்ளன.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சேலம் மாவட்டம் 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.56% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.20 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 87.56% பேரும், மாணவியர் 94.51 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.3% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் 19வது இடத்தை பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.