Salem

News January 8, 2025

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் ஜன. 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் 1.காலை 10 மணி கீரை பாப்பம்பட்டியில் ஏரியில் விவசாயிகள் நீர் நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய குடியரசு கட்சி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்  3.பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைத் திருவிழா இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சிகள் 4.காலை 11 மணி தலேம தொழில் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

News January 8, 2025

சேலம் வழியாக மைசூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.11- ஆம் தேதி அன்று மதியம் 01.00 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06570), திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் (ஜன.12) காலை 06.30 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும். சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News January 8, 2025

“HMPVவைரஸ் என்பது சாதாரணமானது தான்”

image

சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஹெச்.எம்.பி.வி., வைரஸ் கண்டறியப்பட்டடு, தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது கொரோனா வைரஸ் போன்ற தாக்கத்தை ஏற்ப்படுத்திவிடுமோ என பொதுமக்கள் பலரும் அச்சப்படுகின்றனர். ஆனால் “HMPVவைரஸ் என்பது சாதாரணமானது தான். ஆஸ்துமா, இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் ” என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

News January 7, 2025

மாநகர காவல் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிரவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 7 இரவு அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டது.

News January 7, 2025

காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொட்டில் குழந்தை திட்டத்திற்கு, சேலம் மாவட்டத்தில், ஐந்து காப்பாளர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 42 வயதிற்குள் இருக்கும் விருப்பமுள்ள பெண்கள் 31 1.2025க்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள, துறை அலுவலகத்தில், விண்ணப்பங்களை வழங்கலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

News January 7, 2025

சேலம் வழியாக பெங்களூரு – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

image

பொங்கல் பண்டிகையையொட்டி, பெங்களூரு-தூத்துக்குடி இடையே ஜன.10-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது. கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும்.

News January 7, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

image

சேலம், காட்பாடி வழியாக இயக்கப்படும் கோவை- கயா (03680) சிறப்பு ரயில் இன்று (ஜன.07) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக 05.20 மணி நேரம் தாமதமாக இன்று நண்பகல் 01.10 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News January 7, 2025

சேலத்தில் 5மாத சிசு மீட்பு

image

கெங்கவல்லி பத்தாவது வார்டில் நேற்று (ஜன.06) மாலை சப்பானி தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் 5 மாத சிசு சாக்கடையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் உடனடியாக சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி ஆய்வு செய்து வருகின்றனர்.

News January 7, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

image

சேலம் (ஜன.7) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 9.30 மணியளவில் திமுக சார்பில் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். 2) 10 மணி பெரியார் பல்கலைக்கழக கலைத் திருவிழா. 3) சேலம் துணை தபால் நிலையங்களில் ஆதார் முகாம். 4) காலை 11 மணி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம். 5) மாலை 6:00 மணி பழைய பேருந்து நிலையத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

News January 7, 2025

”ஆன்லைன் கடன் செயலிகள் தவிர்ப்பீர்” 

image

சேலம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில் ”சைபர் அலார்ட் ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் பெறுவதை கட்டாயம் தவிர்ப்பீர். நீங்கள் பெரும்கடன் தொகைக்கு அதிகவட்டி தொகை விதிக்கப்படுவதோடு உங்கள் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டு அவை தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு சைபர் குற்றவாளிகள் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அபாயம் உள்ளது. ஆன்லைன் நிதி சார்ந்த குற்றங்கள்புகாருக்கு1930 அழைக்கவும்”.

error: Content is protected !!