India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர்-சேலம் இடையேயான TNPL போட்டி, நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. திருப்பூர் அணி சார்பாக, துஷார் 79 ரன்களும், குரு 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறப்படுவதை எப்படி வரவேற்க முடியும்? அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. மேலும் திமுக, ஒரு குடும்ப கட்சி என்று பேசினார்.
சேலத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக கூறப்படுவதை எப்படி வரவேற்க முடியும்? அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை. மேலும் திமுக, ஒரு குடும்ப கட்சி என்று பேசினார்.
சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். நாகை மாவட்ட செயலாளரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓஎஸ்.மணியன் ஏற்பாட்டில், நாகபட்டினம் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த நேதாஜி தலைமையில் இணைந்தனர்.
சேலத்தில் மெட்ரோ ரயில் இயக்க சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து 2 வழித்தடங்களில் இயக்குவது குறித்து தனியார் நிறுவனம் திட்ட அறிக்கையை தயாரித்து அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. மேலும் சேலத்தில் விரைவில் மெட்ரோ ரயில் அமைக்க ஆய்வு நடத்த அதிகாரிகள் குழு வர உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நாளை (ஜூலை.22) அயோத்தியாபட்டணம், கொளத்தூர், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 19 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் டாக்டர் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அம்மா உணவகத்தில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விட்டது. மூன்றாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டு, தற்போது முதல்வர் ஆய்வு என்று நாடகம் நடத்துக்கிறார். என பேசினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓமலூரில் உள்ள சேலம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணி அளவில் வருகை தர உள்ளார். சேலம் புறநகர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வரவேற்க வர வேண்டும் என்று ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கேட்டுக்கொண்டார். மேலும் அவர் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலம், பிற நிலங்களில் இருந்தும் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளங்கள் குறித்து பதிவான வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 26ஆம் தேதி சேலம் டிஐஜி, நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
Sorry, no posts matched your criteria.