Salem

News January 9, 2025

திருப்பதியில் பலியான சேலம் பெண் இவர் தான்

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் மல்லிகா என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அப்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் இறந்தனர். இவர் 16வது வார்டு தாசனுரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மல்லிகா(50) என தெரியவந்தது. 

News January 9, 2025

சேலத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு

image

சேலம் மாவட்டத்தில் 1,735 ரேஷன் கடைகள் மூலம் முழு கரும்புடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு 10.78 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இன்று (ஜன.09) முதல் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

News January 9, 2025

சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶ காலை 8 மணி பள்ளப்பட்டி முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு 500 பக்தர்கள் பாயாத்திரை ▶9மணி ஸ்ரீரங்கப் பாளையம் ரேஷன் கடையில் ஆட்சியர் டோக்கன் வழங்கல் குறித்து ஆய்வு. ▶ 11 மணி குள்ளம்பட்டி பகுதியில் ஆட்சியர் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ▶லை 4 மணி சிபிஎஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ▶அனைத்து பெருமாமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் பணி தீவிரம் 

News January 9, 2025

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது 

image

திருநங்கையர் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர். சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், ஏப்ரல் 15 அன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News January 8, 2025

மாநகர காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ரோந்து செல்லும் காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.

News January 8, 2025

சேலத்தில் ஒரே ஆண்டில் 16 பேர் மீது குண்டர் சட்டம்!

image

சேலம் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட, 30 காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகளில், சிறை தண்டனை பெற்று, திருந்தாமல் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும், தொடர் குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும், 16 திருந்தாத குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News January 8, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.16- ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், ஜன.17- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் (06046/06047) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

இஸ்ரோ தலைவருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!

image

“இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை. தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

News January 8, 2025

உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

image

சேலத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை விண்ணப்பபடிவம் பெற விருப்பம் உள்ளவர்கள், தொழில்நெறி விளையாட்டு மையத்தில் அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். 

News January 8, 2025

நாய்கடி பாதிப்பு: சேலம் முதலிடம்!

image

கடந்த 2024- ஆம் ஆண்டு தமிழகத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 37,011 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சையில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!