Salem

News April 30, 2024

சேலம் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

சேலத்தில் நேற்று (ஏப்.29) 106.88 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

வாக்கு எண்ணும் மையம் பகுதியில் டிரோன்களுக்கு தடை

image

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

சேலம்: குண்டு மல்லி விலை சரிவு

image

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் கடைவீதியில் உள்ள பூ மாரக்கெட்டுக்கு பூக்களை கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.360க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.80 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டது.

News April 29, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-29) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 29, 2024

ரயில் டிக்கெட் விற்பவர்களை கண்காணிக்க தனிப்படை

image

கோடை விடுமுறையையொட்டி, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி முக்கிய நகரங்களில் முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ரயில்வே போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News April 29, 2024

ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வரி வசூல்

image

சேலம் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை என சேலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடந்த சிறப்பு வரிவசூல் முகாமில் ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது. மேலும் சொத்து வரி செலுத்தாத நபர்கள் உடனே செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

News April 29, 2024

சேலம் நேற்றைய வெப்பநிலை விவரம்

image

சேலத்தில் நேற்று (ஏப்.28) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்

image

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதிச் செய்யும் வகையில் நடைபெற்ற அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

News April 29, 2024

சேலம் மாவட்ட நீதித்துறையில் வேலை!

image

சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 28, 2024

வனப்பகுதியில் வனத்துறையினர் எச்சரிக்கை

image

சேலம் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு குறித்து வனத்துறையினர் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்துக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!