India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழாவையொட்டி சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை ஏற்காட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் வகையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்திற்கு 300 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு www. tnstc. in (or) tntstc.bus.ticket booking.App என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
சேலம், குரும்பப்பட்டி கிராமம், சின்னநாச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திக் (28). இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் டாக்டர் ராமதாஸ் குறித்து சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வைத்து அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
கோடை விடுமுறை காரணமாக சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் இன்று அதிக அளவில் திரண்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள புள்ளிமான், கடமான், முதலை, வெள்ளை மயில் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு கோடை திருவிழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம், ஏற்காடு கோடை விழா வருகின்ற மே.22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஏற்காட்டிற்கு செல்வதற்கு சேலத்தில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏற்காடு சுற்றி பார்க்கும் வகையில் மூன்று உள்வட்ட பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் அதிக அளவில் ஏற்காடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் குண்டுமல்லி கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் வரத்து குறைவின் காரணமாகவும், இன்று முகூர்த்த தினம் என்பதாலும் அதிரடியாக விலை உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.360க்கு விற்கப்பட்ட குண்டு மல்லி, நேற்று ஒரே நாளில் ரூ.140 உயர்ந்து 1 கிலோ ரூ.500க்கு விற்பனையானது. அதேபோன்று ரூ.200க்கு விற்கப்பட்ட சன்னமல்லி, பட்டர் ரோஸ் நேற்று ரூ.400க்கு விற்கப்பட்டன.
சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியில் தமிழக அரசின் சார்பில் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு இக்கல்வியாண்டில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 07.06.2024 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து
அதிகரித்து வரும் காரணமாக மறு உத்தரவு வரும் வரை ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில் சார்பில் ராமாபுரம் மாரியம்மன் கோயில் திடலில் தவ மையம் திறப்பு விழா வருகிற 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் காயகல்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியில் தமிழக அரசின் சார்பில் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு இக்கல்வியாண்டில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 07.06.2024 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.