India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்ட செய்தியில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்து அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று(ஏப்.30) தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று கலெக்டர் பிருந்தாதேவி விசாரணை நடத்தினார். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்எல்ஏ ராஜேந்திரன், டீன் டாக்டர் மணியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சேலம், கோரிமேடு அரசு ஐடிஐயில் வாட்ச் அண்ட் கிளாக் ரிப்பேர் என்ற 3 மாத சிறு குறுகிய கால பயிற்சிக்கு இலவச சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே 22ம் தேதிக்குள் உரிய சான்றிதழ்களுடன் சேலம் அரசு ஐ.டி.ஐ.யை அணுகி பயன் பெறலாம் என சேலம் அரசு ஐடிஐ துணை இயக்குனரகம் முதல்வர் (பொ) ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை சித்தர் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்து, சித்தர் சிறப்பை கொண்டாடும் வகையில் சேலம் சுற்றுப்புற பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த தேங்காய், ராகி, அவரை, வெல்லம் உள்ளிட்டவை கொண்டு அவரக்கொட்டை களி கிண்டி, சாமிக்கு படையில் இட்டு வழிபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. மண் பானை தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. பானை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. பைப் பொருத்தப்பட்ட மண்பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
Sorry, no posts matched your criteria.