India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் ஜன.13- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை எழும்பூர்- மங்களூருவுக்கு சிறப்பு ரயில் (06037) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13- ம் தேதி பிற்பகல் 03.00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.50 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும். இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூ.4,076 முதல் ரூ.7,121 வரையும், சென்னையிலிருந்து சேலத்துக்கு செல்வதற்கு விமானப் பயணக் கட்டணமாக ரூ.3,957 முதல் ரூ.10,539 வரையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர், மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின், அடிப்படையில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொட்டில் குழந்தை திட்டத்தின் உள்ள 5 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8, 12, நர்சிங் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, 4 ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம்-636001 என்ற முகவரிக்கு 31.01.2025 தேதிக்குள் நேரில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இன்றைய(11.1.25) முக்கிய நிகழ்ச்சிகள். 1) அனைத்து கிராமிய நாட்டுப்புற கலைஞர்களின் மாவட்ட மாநாடு சசேசன்சாவடி. 2) கொங்கு வீடியோவாக கண்காட்சி நடிகர் சிவகுமார் துவக்கம். 3) கொங்கு பள்ளி பொங்கல் விழா. 4) ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழா. 5)சேஷைப் பள்ளியில் பொங்கல் விழா. 6) ஜெயராம் கல்லூரியில் பொங்கல் விழா.

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.10) இரவு ரோந்து காவலர்கள் விபரங்கள் வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.10) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணையை வரும் ஜன.28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜன.11ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், ஜன.12ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06067/06068) இயக்கப்படுகின்றன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை,சேலம், ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி மற்றும் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள மதுபான கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.