India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 26) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சேலத்தில் ஆடி பண்டிகையொட்டி நடைபெற்று வந்த அரசுப் பொருட்காட்சி “6” ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி குறியீடுகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் மஜ்ரா கொல்லப்பட்டியில் உள்ள மாவட்ட வள மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39 அடியாக இருந்து, 9 நாட்களில் 46.18 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1 வருடத்திற்கு பிறகு 90 அடியை எட்டியது. மேலும், வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து விணாடிக்கு 23,331 கனஅடியில் இருந்து 28,856 கனஅடியாக உயர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநாடு நடத்த திருச்சி மற்றும் மதுரையில் இடம் பார்த்து வந்த நிலையில், தற்போது சேலத்திலும் இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், கட்சியின் முதல் மாநாடு சேலத்தில் நடக்குமா? என கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ஆணையாளர் பாலச்சந்தர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் 25ஆவது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, மாநகராட்சி அலுவலகம் வந்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், மரக்கன்று நட்டுவைத்து பின்னர் பொறுப்பேற்று கொண்டார்.
சேலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ரயில் வழித்தட வேலி அமைக்கப்பட வேண்டும் என திமுக எம்.பி செல்வகணபதி வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அவசரமாக செல்ல வேண்டுமெனில் நீண்ட தூரம் சுற்றி போகும் நிலை உள்ளது. மக்களை நாம் மதிக்க வேண்டும். அரசு என்பது மக்களுக்காக தான். அதனால், எல்லா இடங்களிலும் வேலிகள் அமைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை எதிர்த்து பலரும் போராடி வருகின்றனர். இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில், உணவுகளின் விலையும் திடீரென உயர்த்தப்பட்டது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1 வடை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2 வடை ரூ.15க்கும், மினி மீல்ஸ் ரூ.80க்கும், மினி டிபன் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலை., வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துப்புரவு, பராமரிப்பு பணியாளர், ஆய்வக, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு, டிகிரி, இன்ஜினியரிங் படித்த 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.7ஆம் தேதிக்குள் <
ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை ,சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3ஆம் தேதி இராமேஸ்வரத்திற்கும், 4ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.