India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அடுத்த கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சேலம் எம்.பி.செல்வகணபதி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளாராம். ஏனென்றால் 2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்றவர்கள் அங்கு தான் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வெற்றி பெற்றுள்ளனர். எனவே அந்த சென்டிமென்ட தான் விஜய் அங்கு மாநாடு நடத்த காரணமாக இருக்குமென பலரும் கூறி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் காவிரியில் இருந்து 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம், காவிரியில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சேலம் மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,18,296 கன அடியில் இருந்து 1,23,184 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 101.700 அடியில் இருந்து 103 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நீர் இருப்பு 68,958 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை நிரப்ப வேண்டும்; நிரந்தர பதிவாளரை நியமிக்கும் வரை ஐஏஎஸ் அதிகாரியை பதிவாளர் பொறுப்புக்கு நியமிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விரைந்து விசாரித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்த நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் www.tnvelaivaaippu.gov.in இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை பெற்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையங்களுக்கு சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டாவில் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறபட்டவுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் வரலாற்றில் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து 450 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் 60 அடி அதிகரித்து, தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.300க்கு விற்ற குண்டு மல்லி நேற்று ரூ.500 – ரூ.550 வரை விற்கப்பட்டது. ரூ.150க்கு விற்ற முல்லை ரூ.200க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் விற்கப்பட்டது. காக்காட்டான், மலைக்காட்டான் ரூ.160க்கும், செவ்வரளி, நந்தியாவட்டம், சாதா சம்பங்கி ஆகியவை ரூ100க்கும் விற்பனை. வெள்ளை அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை ரூ.60க்கும் விற்பனை.
Sorry, no posts matched your criteria.