India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரபதிவு அதிகளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் வழங்கப்பட்ட வந்து நிலையில், 200 ஆக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பு.
சேலம் மாவட்டத்தில் கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாபு, காமராஜர் நகர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷீலாதேவி உள்பட 15 ஆசிரியர்களுக்கு அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.செப்.05- ல் சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) செப்.09, 16, 23, 30 தேதிகள் தவிர வரும் செப்.30 வரை திண்டுக்கல் வரையும், மறுமார்க்கத்தில், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செப்.03, 10, 17, 24 தேதிகள் தவிர செப்.30 வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். செங்கோட்டை-திண்டுக்கல் இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 109-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் செப்.12 மாலை 3 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, ஒரு மெயில் வந்தது. இதனை அடுத்து சேலம் மாநகர கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினர் தற்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். மூன்றாவது முறையாக தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பரபரப்பு நிலவு வருகிறது.
சேலம் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Deputy Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
சேலம் மாநகர் காவல்துறை, சாலை விதிகளை பின்பற்ற அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. இரட்டை வெள்ளை/மஞ்சள் கோடுகள் உள்ள சாலைகளில், இரு திசைகளிலும் காட்சித் தடை இருக்கும் காரணத்தால் எந்தவொரு வாகனமும் அந்த கோடுகளை கடந்துச் செல்ல அனுமதி இல்லை. சாலை பாதுகாப்பிற்காக இவ்விதியை கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சேலம் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அளவில் தேர்வாகும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நம்மாழ்வார் விருது வழங்கவுள்ளது. விருதுடன் ரூபாய் 2 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியான விவசாயிகள், அக்ரிஸ்நெட் இணையதளத்தில் வரும் செப்.15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
சேலம் (செப்டம்பர் 4 )வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️சித்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் ▶️மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபம் ▶️ அயோத்தியபட்டணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் (பேளூர் பிரதான சாலை)▶️ஓமலூர் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி (தொளசம்பட்டி)▶️ தலைவாசல் சமுதாயக்கூடம் (சிறுவாச்சூர்)
Sorry, no posts matched your criteria.