India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் திறப்பட்டுள்ளதையொட்டி, மேட்டூர் வட்டம், தங்கமாபுரிப்பட்டணம், பெரியார் நகர் பகுதியில் காவிரி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று இரவு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். உடன் மேட்டூர் சார் ஆட்சியர் நே.பொன்மணி, உள்ளார்.
சேலம், மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.இராஜேந்திரன், உடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவது, நீர்நிலைகளுக்கு அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற ஆபத்தை விலைக்கும் செயல்களை மேற்கொள்ளக்கூடாது என்று கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார்.
சேலம், மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இன்று முதல் டிசம்பர் 13வரை 137 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணையில் ஒன்றாகும். காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் 1925ஆண்டு துவங்கி 1934ஆம் ஆண்டு கர்னல் எல்லீஸ் வடிவமைப்பின் படி ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அணையின் உயரம் (ம) அகலம் 214 மற்றும் 171 அடி ஆகும். இந்த அணையில் அதிகபட்சம் சேமிப்பு 120 அடி ஆகும். இந்த அணையால், 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் தலைவர் சௌமியா அன்புமணி, நீர்தேக்கப் பகுதிகளையும், உபரிநீர் போக்கி அமைந்துள்ள 16 கண்பாலம் பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வின்போது மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், அதிகாரிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆயுஷ் தொடர்பான மருத்துவமனைகள், சிகிச்சையையும் மற்றும் ஆரோக்கிய மையங்கள் போன்றவற்றை நடத்தும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கு இச்செய்தி வெளியிட்ட 2 வாரங்களுக்குள் https//:indianfrro.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று இரவுக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது . இந்த சூழலில், அணையின் 16 கண் மதகு பாலம் வழியாக 75,000 முதல் 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்பிருப்பதால் காவிரி கரையோரங்களில் உள்ள சேலம் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணையின் செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீரை சரபங்கா திட்டப்படி நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. சரபங்கா வடிநில ஏரிககளை நிரப்பும் திட்டத்தை 3 ஆண்டாகியும் திமுக அரசு செய்யவில்லை. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை அரசு தடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட சரபங்கா திட்டத்தை திமுக அரசு முடிக்கவில்லை என திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
சேலம் வாழப்பாடி மேட்டுப்பட்டி டோல்கேட்டில் நேற்று இரவு மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் சென்னை போராட்டத்திற்கு வேனில் சென்றனர். அப்பொழுது போலீசார் தடுத்து நிறுத்தி சென்னைக்கு யாரும் செல்லக்கூடாது என்று கூறியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பெண்கள் மேட்டுப்பட்டி டோல்கேட்டில் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.