India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களவை தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 23740 ஓட்டுகளும், பாமக 8121 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 3957 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் நல பாதுகாப்பு துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக காவலர்கள் (ம) அதிகாரிகள் அவரை மீட்டு 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடல் சோர்வு (ம) வயிற்றுப்போக்கின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக 4012 வாக்குகளும், திமுக 2646 வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுக 1366 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையுடன் திகழ்கிறது.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் மொத்தம் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் க. மனோஜ்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2019இல் சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன், 11.76% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கேஆர்எஸ் சரவணன், 1,46,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் P.விக்னேஷும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
காடையாம்பட்டி தாலுகா காரவள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பசுமாட்டை மர்ம விலங்கு ஒன்று அடித்து கொன்றது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். வனத்திறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்தனர். அதில் நேற்று இரவு மீண்டும் ஒரு மாட்டை சிறுத்தை அடித்து கொன்று சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் ஏற்காடு மலைப்பாதையில் மொபைல் சிக்னல் கிடைக்கும் 7 இடங்கள் அடையாளம் தெரிந்துக்கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் சம்பந்தமான புகைப்படங்களை தெரிவிக்கவும் வனத்துறையினரின் தொலைபேசி எண்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடுமுறை நாளான (ஜூன்.2) நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் பூங்காவிற்கு சென்று பொழுதை போக்கினர். சிறுவர், சிறுமிகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி ஆனந்தமாக விளையாடினர். சிலர் மேட்டூர் அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அணையின் வலது கரை பகுதியிலுள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை கண்டுகளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-02) மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.