India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் செல்வகணபதி – 5,46,272 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் விக்னேஷ் – 4,78,901 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் அண்ணாதுரை – 1,22,110 வாக்குகள்
*நாதக வேட்பாளர் க.மனோஜ்குமார்- 73,623 வாக்குகள்
சேலம் ஓமலூர் பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணத்து கூண்டுகளை வைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வனப்பகுதிக்கு மக்கள் தனியே வரக்கூடாது, இரவில் வெளியே உறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி அரிமா சங்கம், உதய மருத்துவமனை இணைந்து நேற்று சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இம்முகாமில், அரிமா சங்க மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் மோதிலால் தலைமையிலான குழு, 150 பேருக்கு பரிசோதனை செய்தது. இலவசமாக மருந்து, மாத்திரைகள், மதிய உணவு வழங்கப்பட்டது. முதல் உதவி தலைவர் பெரியார்மன்னன், உதயா மருத்துவமனை மேலாளர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(43). மின்வாரிய ஊழியரான இவர், பழுதடைந்த மின் இணைப்பை சீரமைக்க இன்று மாலை கம்பத்தில் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே தொங்கியபடி உயிரிழந்தார். இவரது உடலை மீட்ட வாழப்பாடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நாடாளுமன்ற தொகுதியின் இறுதி சுற்று முடிவில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 5,62,020 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 4,92,958 வாக்குகளும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் பாமக அண்ணாதுரை 1,25,829 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ் குமார் 75636 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் டி எம் செல்வ கணபதி 69,0062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சேலம் மக்களவை தொகுதியில் தற்போது வரை திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 306387 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 257972 பின்னடைவை சந்தித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 48415 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலையில் உள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 163762 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 140378 பின்னடைவை சந்தித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 23384 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.
சேலம் மக்களவை தொகுதியில் 4-வது சுற்றில் திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி 107884 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் . இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 95437 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.சேலம் மக்களவைத் தொகுதியில் 12447 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் டி. எம் செல்வ கணபதி முன்னிலை.
Sorry, no posts matched your criteria.