India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) காலையிலும் வானம் இருள் சூழ்ந்து, பனி மூட்டமும் அதிகளவு இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். தொடர் சாரல் மழையால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) மாணாக்கர் முதல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 11-ஆம் தேதி அன்று கலை வணிகவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளதாக சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இன்று அறிவித்துள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) மாணாக்கர் முதல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 11-ஆம் தேதி அன்று கலை வணிகவியல் மற்றும் மொழி பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளதாக சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இன்று அறிவித்துள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 48 வயது மதிக்கப்பட்ட நபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட கைக்கு சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. 14 நாட்களுக்குப் பிறகு அவரது கை நன்கு குணமாகிய நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இச்சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் Dr.சுந்தர்ராஜன், மருத்துவ இயக்குனர் Dr.அபிராமி பாராட்டினர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 06) மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-06) மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:- ஓமலூர் – 2,094, எடப்பாடி – 1,832, சேலம் (மேற்கு) – 2,619, சேலம் (வடக்கு) – 2,940, சேலம் (தெற்கு) – 3,010, வீரபாண்டி – 2,182, தபால் வாக்குகளில் பதிவு – 217. இதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 14 ஆயிரத்து 894 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சேலம் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-05) மாவட்டத்தில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம் மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷை தவிர, பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
Sorry, no posts matched your criteria.