India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் வர்த்தம், வணிகம், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களால் நடத்தப்பட்டு வரும் நிறுவனத்திற்கு, சேலம் மாநகராட்சி ஆணையாளரால் வழங்கப்படும் வர்த்தக உரிமத்தை கட்டாயம் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனு செய்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி வணிக உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர தீவிர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்த போது லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. விசாரணையில் உள்துறை செயலாளர் அமுதா அவரை பணிநீக்கம் செய்ய கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சேலத்தில் பணியாற்றி வந்த கணேசனை கமிஷனர் விஜயகுமாரி பணி நீக்கம் செய்துள்ளார்.
சங்ககிரி கல்வி அறக்கட்டளை சார்பில் சங்ககிரி அரசு மகளிர் மேல் நிலைபள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் பொந்துகிணறு பகுதியை சேர்ந்த மாணவி வர்ஷினிக்கு ஒரு வருடத்திற்கு தேவையான நோட்ஸ் மற்றும் நோட்டுகள் இன்று டிரஸ்ட் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் வரதராஜ், சண்முகம், ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.9) மாவட்டத்தில் அதிகபட்சமாக 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுக்காவிற்குட்பட்ட
270 தேர்வு மையங்களில் 361 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வை 1 லட்சத்து 6 ஆயிரத்து 82 பேர் எழுதுகின்றனர்.
சேலம், வாழப்பாடி அருகே நெடுஞ்சாலை பகுதியில் வாழப்பாடி போலீசார் வாகன சிகிச்சையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தலைவாசல் வரகூர் மருதையான் மகன் சிவபாலன் ( 35 ) என்பவர் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருளை வாழப்பாடி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து சிவபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்-8) மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் சேலம் அண்ணா பூங்கா பின்புறம், தமிழ் சங்கத்தில் நாளை நடைபெறும் முகாமில் அசல் சான்றிதழுடன் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு
வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாநகரில் 25 ஆண்டுகள் பணி முடித்த 51 பேருக்கு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கி கமிஷனர் விஜயகுமாரி இன்று உத்தரவிட்டார். இவர்களுக்கு கூடுதலாக ரூ.3ஆயிரம் சம்பளம்
கிடைக்கும். முன்கூட்டியே அறிவிக்கபடவேண்டிய இந்த பதவி உயர்வு தேர்தல் காரணமாக தாமதமாக இன்று வழங்கப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்து பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைச் செய்தார். அதிமுக சார்பில் நான் ஒருவன் மட்டுமே தமிழகம் முழுவதும் பரப்புரைச் செய்தேன். தேமுதிகவின் பிரேமலதாவும் பரப்புரைச் செய்தார் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.