India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அருகே இருசக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனங்களில் சென்ற இரு குழந்தைகள் உள்பட 5 போ் பலியாகினா். முதற்கட்ட விசாரணையில், தனியாா் பேருந்து வேகமாக வந்ததுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. வேகத்தடை போடப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் அதன்மீது ஏறியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அருகே சுக்காம்பட்டி இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆச்சாங்குட்டப்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், 2 டூவீலர்கள் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஒரு ஆண், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 13 பயணிகள் ரயில்கள், சிறப்பு எண்களுக்கு மாற்றாக ஜூலை 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் பழைய எண்களிலேயே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், பயணிகள் ரயில்கள், சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, சிறப்பு எண்களுடனும், சிறப்பு கட்டணத்துடனும் இயக்கப்பட்டன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து இன்று வாழப்பாடி உழவர் சந்தையில், தக்காளி 1 கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவிற்கு 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.11) மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தின் 118வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜூன் 11 – ஜூன் 14 வரை சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 13ல் புதுச்சேரி-மங்களூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 15ல் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று காசோலை கொடுத்துள்ளார். பணம் கொடுக்காததால் 2022 ஆம் ஆண்டு ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், செக் மோசடி வழக்கில் அபராதத்துடன் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் தீர்ப்பு வழங்கினார்.
சேலம் மாநகரத்தில் பணிபுரியும் 51 தலைமை காவலர்கள், சிறப்புக்காவல் உதவி ஆய்வாளர்களாக (SSI) பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேற்படி பதவி உயர்வு பெற்ற சிறப்புக்காவல் உதவி ஆய்வாளர்கள் இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா.விஜயகுமாரி, வாழ்த்து பெற்றனர். மேலும் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.
சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. முதல் நாளான இன்று சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் இக்கலந்தாய்வில் பங்கேற்று தங்கள் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.