India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை நேற்று கடத்திச் சென்ற காரிப்பட்டி பெண் வினோதினியை சேலம் மாநகர போலீசார், இன்று அதிகாலை கைது செய்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வளைகாப்பு நடத்திய பிறகு தனது கர்ப்பம் கலைந்ததால், ஆண் குழந்தையை கடத்திச் சென்று தனது குழந்தையாக வளர்க்க இந்த பெண் திட்டமிட்டு செயல்பட்டது, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை நேற்று பெண் ஒருவர் கடத்திச் சென்றார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதுகுறித்து சேலம் மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து குழந்தையை கடத்திச் சென்றது, சேலம் அடுத்த காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பது தெரியவந்தது. வினோதினையை கைது செய்து சேலம் மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 5 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை, பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, கடத்திச் சென்ற பெண்ணின் அடையாளம் மற்றும் படத்தை வெளியிட்டு, சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு, 949810094, சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை 9498181218 உள்ளிட்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் படி, குற்றமிழைத்தவர் என வெளியிட்டு வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலை. ஊழியர்கள் 4 பேரை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாள்கள் ஆன குழந்தையை கடத்தி சென்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த தங்கதுரை, வெண்ணிலா தம்பதிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பெண் ஒருவர், அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சிசிடிவி காட்சி வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், அரியானூர் அருகே அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று தமிழ் புதல்வன் திட்டத்தின் வங்கி ஏடிஎம் கார்டு மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), அருள் (சேலம் மேற்கு) சேலம் மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர், ஆர்டிஓ, சமூக நலத்துறை அலுவலர், சட்டக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென் சேலம் துணை ஆணையர் மதிவாணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் எஸ்பியான வேல்முருகன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆவடி ஆணையரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பியான கீதா எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சேலம் தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வார இறுதி நாள்களை முன்னிட்டு ஆக.11ஆம் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில், 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க இப்பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாழப்பாடி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.