India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மற்றும் ஆத்தூர் வட்டாரத்தில் 2 மையம் செயல்பட்டு வருகின்றன. விருப்பமுள்ளவர்கள் ஜூன் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உங்கள் சுயவிவரத்தை மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக பாட்னாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாட்னா – மங்களூரு இடையே வரும் 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், பாட்னாவில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.13) மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சேலம்: தொப்பூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகளால் மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொன்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் நாளை (14.6.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின் விநியோகம் இருக்காது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சகி பெண்கள் ஒருங்கிணைந்து சேவை மையத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 126 சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 880 கோடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவியுடன் தொழில் முனைவோர்கள் பங்களிப்புடன் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி பூங்கா மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வாய்ப்புள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை வழக்கறிஞர் பத்மலட்சுமி சேலம் நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காக தமிழகத்திற்க்கு வந்துள்ளார். திருநங்கைகள் வீட்டில் அடைந்து இருக்காமல் படித்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என அவர் கூறினார். சேலம் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் வழக்கில் வாதாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தின் சார்பில் பெங்களூரு, சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in. மற்றும் tnstc செயலி மூலம் இன்று முதல் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 305 தனியார் பள்ளி பேருந்துகளை இயக்கத் தடை விதித்து, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிப் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர கால வழி உள்ளிட்டவைக் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.