India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இளம்பெண் (21 வயது) ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது தி.மலையை சேர்ந்தவர் என தெரியவந்தது. ஆத்தூரை சேர்ந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அவரை பார்க்க வந்ததாகவும், ஆனால் அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதும் தெரியவந்தது. மகளிர் போலீசார் அவரிடம் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன் பாளையம் அருகே நேற்று மாலை சேலம் நோக்கிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா 2024 சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் 15.08.2024 அன்று நடைபெற்றுள்ளது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரருக்கு கௌரவித்து, நற்சான்றிதழ்களை வழங்கயுள்ளார்.
➤சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 2000 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ➤மேட்டூர் அணை நடப்பாண்டில் 2ஆவது முறையாக 120 அடியை எட்டியது. ➤சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ➤சேலம் மாவட்டத்திற்கு இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளரும், 45வது கோட்டம் முன்னாள் வட்ட செயலாளருமான குகை பெருமாள் (74) கடந்த 8ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கே.ஆர்.தோப்பூர் துணை நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண்கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், கரியாம்பட்டி, இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பிஜி மாணவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும், பொது கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியும் நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கலாம் எனவும், போக்குவரத்து சற்றே பாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சுதந்திர தின விழா நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது. எனவே, அன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார.
Sorry, no posts matched your criteria.