Salem

News May 28, 2024

பைக்கில் வந்த வாலிபர் கீழே விழுந்ததில் பலி

image

தம்மம்பட்டி, நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருப்பவர் யுவராஜ். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் நாகியம்பட்டியில் இருந்து மல்லியகரை நோக்கி வந்து
கொண்டிருந்தார். கந்தசாமி புதூர் ஆஞ்சநேயர் கோவில்
அருகில் வந்த போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில்
இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

News May 28, 2024

டாஸ்மாக் கடையை காலி செய்ய கோரிக்கை

image

கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் கடை கடந்த 9 வருடங்களாக இயங்கி வந்த நிலையில், இடத்தின் உரிமையாளர்கள் கடையை காலி செய்யுமாறு மனு அளித்தனர். மனு அளித்து 2 வருடம் ஆகியும் கடை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், நேற்று அரசு மதுபான கடைக்கு மது பாட்டில் இறக்க வந்த லாரியை இறக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் சமாதானம் பேசினார்.

News May 27, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் 97.3 டிகிரி

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று அதிகபட்சமாக 97.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 27, 2024

சேலம் மேட்டூர் அணையின் சிறப்புகள்!

image

காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ்-இன் வடிவமைப்பின்படி ரூ 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த அணை மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அனையில் தன்ணீர் திறப்பதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீளம் 5300 அடி, அதிகபட்ச நீர்த்தேக்கும் உயரம் 165 அடியாகும்.

News May 27, 2024

சிறுமி திடீர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

image

சேலம் பெரியபுதூரை சேர்ந்தவர் சக்திகுமார். இவரது மனைவி பூஜாகுமாரி (29). ஒடிசாவைச்
சேர்ந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் வந்தனர். இவர்களுக்கு 7வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்றுமுன் தினம் சாப்பிட்டு படுத்த சிறுமிக்கு நள்ளிரவு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

News May 27, 2024

மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

image

மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகின்றன. தற்போது மின் தேவை குறைந்து உள்ளதாக கூறி மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது 210 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

News May 27, 2024

நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

சேலம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சியில் உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குவிந்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், அருவியில் தண்ணீர் வரத்து பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

News May 27, 2024

கோடை விழா: குவிந்த சுற்றுலாப் பயணிகள்

image

சேலம்: ஏற்காடு 47வது கோடை விழாவை ஒட்டி கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 26ஆம் தேதி வரை சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், படகு இல்லத்தில் சுமார் 35 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் கண்டு களித்துள்ளனர்.

News May 26, 2024

கோவில் திருவிழாவில் கலந்து கொள்கிறார் இபிஎஸ்

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை பகுதியில் அமைந்துள்ள கரிய ராமர் கோவிலில் முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்து பொது மக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார். இதில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

News May 25, 2024

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

தொடர் மழை காரணமாக, சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்த தொழிலாளி செந்தமிழ்
(வயது 50) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி இன்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!