India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூன் 17) சிறுவர் சிறுமியர்கள் அனுமதியின்றி ஸ்கேட்டிங் செய்தனர். கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி ஸ்கேட்டிங் செய்தால் விபத்து ஏற்படும் என்பதை அறியாமல் ஸ்கேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தநிலையில், ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற சிறுவர்களின் பெற்றோர்களுக்கு புறநகர் டிஎஸ்பி இன்று (ஜூன் 18) அறிவுரை வழங்கினார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நாளமில்லா அறுவை சிகிச்சை துறையில் புதிய புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு நோயாளிகள் பிரிவானது திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் மதியம் 12 வரை செயல்படும் என்றும், தைராய்டு, சர்க்கரை, மார்பக பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக குடிநீா் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஊரக குடிநீா் இயக்க திட்டம், நிதிக்குழு திட்டங்களின் மூலம் மொத்தமுள்ள 6,47,476 வீடுகளில் இதுவரை 5,40,905 (83.54%) வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழை, அமைச்சா் கே.என்.நேருவிடம் காண்பித்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வாழ்த்து பெற்றாா்.
கேஸ் சிலிண்டர் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா அறிவித்துள்ளார். சிலிண்டர் பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகாா்கள் தொடா்பாக, அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள், முகவா்கள் ஆகியோா்களைக் கொண்டு மாலை 4 மணிக்கு குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 17) மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
2022-23 ஆண்டில் ஊரக குடிநீர் இயக்க திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அமைச்சர் கே.என்.நேருவை அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ ராஜேந்திரன், எம்.பி. செல்வகணபதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சோதாராம். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். இவர் தற்போது வசிக்கும் தெருவில் ஹார்டுவேர் பெயின்ட் கடை வைத்துள்ளார். நேற்று(ஜூன் 16) மதியம் 1 மணிக்கு ஹெல்மெட் எடுக்க கடையை திறந்தபோது, கடையின் மேற்கூரை வழியே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.7.50 லட்சத்தை திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.16) மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சென்னையை சேர்ந்த ராஜேஷ் குமார், தினேஷ் ஆகியோர் கெங்கவல்லி, சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தரனீஸ் என்பவருடன் கெங்கவல்லிக்கு பைக்கில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது கெங்கவல்லி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் ராஜேஷ் குமார் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்து அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.